ஆப்நகரம்

இந்தியாவில் தென்மேற்கு பருவமழை 4% உயர்வு

இதுவரை நாடு முழுவதும் பதிவாகியுள்ள தென்மேற்குப் பருவமழை எதிர்பார்த்ததைவிட 4% அதிகரித்துள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TNN 14 Jul 2016, 5:41 pm
இதுவரை நாடு முழுவதும் பதிவாகியுள்ள தென்மேற்குப் பருவமழை எதிர்பார்த்ததைவிட 4% அதிகரித்துள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil monsoon 4 above normal in india
இந்தியாவில் தென்மேற்கு பருவமழை 4% உயர்வு


நாட்டின் பெருமளவு நீர் தேவையை பூர்த்தி செய்துவரும் தென்மேற்குப் பருவமழை நடப்பாண்டில் ஜூன் மாதம் 8ம் தேதியன்று கேரளாவில் வழக்கம்போல தொடங்கியது. அதைத்தொடர்ந்து, இதர மாநிலங்களுக்கும் பரவி, தற்போது கட்ச் வளைகுடா மற்றும் ராஜஸ்தானின் மேற்குப் பகுதிகளில் தீவிரம் அடைந்துள்ளது. இதனால், மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது கனமழை பெய்துவருகிறது.

இதன்படி, ஜூலை 14ம் தேதி வரையான காலத்தில், நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை எதிர்பார்த்ததைவிட, 4% கூடுதலாகவே பதிவாகியுள்ளதாக, டெல்லியில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தொடக்க காலத்தில், பருவமழையில் பற்றாக்குறை நிலவியபோதிலும், பின்னர் படிப்படியாக, தீவிரம் அடைந்துள்ளதாகவும், வரும் நாட்களில் அரேபியக் கடலை ஒட்டியுள்ள இந்தியப் நிலப்பகுதி முழுவதும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

அடுத்த செய்தி