ஆப்நகரம்

தென்மேற்கு பருவமழை 4 நாட்களில் நிறைவடையும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்மேற்கு பருவமழை 4 நாட்களில் நிறைவடையும் என்றும், 5 சதவீதம் குறைவு என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TNN 14 Sep 2016, 1:04 am
டெல்லி: தென்மேற்கு பருவமழை 4 நாட்களில் நிறைவடையும் என்றும், 5 சதவீதம் குறைவு என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil monsoon could start withdrawing in next 3 4 days says met department
தென்மேற்கு பருவமழை 4 நாட்களில் நிறைவடையும்: வானிலை ஆய்வு மையம் தகவல்


தென்மேற்கு பருவமழை கந்த ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கியது. 70 நாட்களுக்கும் மேல் பெய்த இந்த பருவமழை, இன்னும் நான்கு நாட்களில் நிறைவடையும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடர்ந்து சீராக பெய்யவில்லை என்றும், இருப்பினும் ராஜஸ்தான், ஒடிசா, உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் நல்ல மழை பெய்தது.

ஆண்டுதோறும் மேற்கு ராஜஸ்தானில் இருந்து செப்டம்பர் 1-ந்தேதி தென்மேற்கு பருவமழை விடைபெறும். ஆனால், இந்தாண்டு 15 நாட்கள் தாமதமாக விடைபெறுகிறது. ஒட்டுமொத்தமாக 5 சதவீதம் மழை குறைவாக பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூன் 1-ஆம் தேதி முதல் செப்டம்பர் 13-ஆம்தேதி வரை 800 மிமீ மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் 759.9 மிமீ மழை மட்டுமே பதிவாகியுள்ளது.

கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியப் பகுதிகளில் 13 சதவீதம் குறைவாகவும், தெற்கு தீபகற்பத்தில் 12 சதவீதம் குறைவாகவும் மழை பதிவாகியுள்ளது. வடமேற்கு பகுதிகளில் 2 சதவீதம்தான் குறைவாக பதிவாகியுள்ளது. மத்திய இந்தியாவில் 1 சதவீதம் மழை அதிகமாக பெய்துள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி