ஆப்நகரம்

மே 30-ல் பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

கேரள மாநிலத்தில் வருகிற மே 30ஆம் தேதி பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

PTI 24 May 2017, 1:01 pm
புதுடெல்லி: கேரள மாநிலத்தில் வருகிற மே 30ஆம் தேதி பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கத்துக்கு மாறாக இம்முறை சற்று முன்னதாகவே தென்மேற்கு பருவமழை தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil monsoon may hit kerala before may 30
மே 30-ல் பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்


இது குறித்து வானிலை அதிகாரி ராஜீவன் கூறுகையில், எல்நினோ காரணமாகவே முன்கூட்டியே பருவமழை தொடங்கவுள்ளது. வழக்கமாக ஜூன் 1ஆம் தேதி தொடங்கும் பருவமழை, அந்தமானில் இம்முறை முன்கூட்டியே தொடங்கிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு பருவமழை 80% வரை பெய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும்,கேரளாவின் பல்வேறு பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே வருவதாக இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவைத் தொடர்ந்து ஓரிரு நாட்கள் வித்தியாசத்தில் பருவமழை தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.

The India Meteorological Department (IMD) may have announced the onset of monsoon in Kerala on May 30 this year, but seasonal rainfall may arrive a day before.

அடுத்த செய்தி