ஆப்நகரம்

கேரளாவில் 29ம் தேதி தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை

கேரளாவில் வருகிற 29ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது.

Samayam Tamil 19 May 2018, 12:38 pm
கேரளாவில் வருகிற 29ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது.
Samayam Tamil Weather Cloud


இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மே மாத இறுதியிலேயே தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது. அந்தமான கடல் பகுதியிலும், தென்கிழக்கு வங்கக் கடலிலும் மழைக்கான அறிகுறிகள் உருவாக தொடங்கி உள்ளது. 23ம் தேதிக்கு பின்னா் இது தெளிவாக தொியவரும். அதன் பிறகு 29ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய பின்பு தமிழகம், ஒடிசா மாநிலங்களிலும் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கும். ஒடிசாவில் ஜூன் மாதம் 10ம் தேதியும், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் ஜூன் மாதம் 2வது வாரத்திலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது.

குறிப்பாக தமிழகத்தின் மேற்கு தொடா்ச்சி மலையையொட்டி உள்ள மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வால்பாறை, அவலாஞ்சி, பாஞ்சிடபால் பகுதிகளிலும் புலிகள் சரணாலய காடுகளிலும் ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது.

அடுத்த செய்தி