ஆப்நகரம்

No Confidence Motion Live: மாலை 6 மணிக்கு நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு துவக்கம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இன்று மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் இன்று காலை 11 மணிக்கு துவங்கியது

Samayam Tamil 20 Jul 2018, 12:07 pm
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் மாலை 6 மணிக் வாக்கெடுப்பு தொடங்கும் என்று சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil lok sabha


பிரதமா் நரேந்திர மோடிதலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி உட்பட எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீா்மானத்தை கொண்டு வந்துள்ளன. சுமார் 15 ஆண்டுகளுக்குப் பின் மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம்ஏற்றக்கொள்ளப்பட்டது.

இதையடுத்து, தீா்மானம் மீது மக்களவையில் இன்று விவாதம் நடைபெற உள்ளது. தொடர்ந்து நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் 273 சீட்டுகளை பெற்றுள்ள பாஜக கட்சி எளிதாக வெற்றி பெறும் என்ற போதிலும், எதிர்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீா்மானத்தின் மீது விவாதம் நடத்த வழங்கப்படும் நேரத்தில் மத்திய அரசின் தோல்விகளை பட்டியலிட உள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக, மக்களவையில் கொண்டுவரப்படும் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு தமிழக எம்பிக்கள் ஆதரவு தெரிவிக்க மாட்டர்கள் என்பதை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மறைமுகமாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்று காலை 11 மணியளவில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதம் துவங்கியது. ஆளும் பாஜகவுக்கு 3 மணி 33 நிமிடம் நேரம் ஒதுக்கப்பட்டது. காங்கிரசுக்கு 38 நிமிடம் நேரம் ஒதுக்கப்பட்டது. இதனால் எதிர்கட்சிகள் விவாதம் செய்ய சரியாக நேரம் ஒதுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்தது.

லோக்சபாவின் மொத்த உறுப்பினர்கள் 544. பெரும்பாண்மைக்கு 266 உறுப்பினர்கள் தேவைப்படுகிறார்கள். இந்நிலையில், பிஜு ஜனதா மக்களவையில் இருந்து வெளியேறினர். இதனால் மக்கள வையின் பலம் 515 ஆககுறைந்தது. இதே போல் சிவசேனா எம்பிக்கள் விவாதத்தில் கலந்து கொள்ளவில்லை.

அடுத்த செய்தி