ஆப்நகரம்

சபரிமலை பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்: எல்லாரும் தரிசனம் பண்ணலாம்!

சபரிமலையில் மாதாந்திர நடை திறக்கும் நாள்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆலோசனை நடைபெறவுள்ளது.

Samayam Tamil 10 Jan 2021, 7:00 am
கார்த்திகை, மார்கழி மாதங்களில் சபரிமலைக்கு படையெடுக்கும் பக்தர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும். கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக குறிப்பிட்ட அளவிலேயே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் இந்த முறை லட்சக்கணக்கான பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
Samayam Tamil sabarimala temple


பக்தர்கள் எண்ணிக்கையை குறைத்துள்ளதால் சபரிமலை வருமானமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாதாந்திர நடை திறக்கும் நாள்களை அதிகரிக்க தந்திரியுடன் ஆலோசிக்கப்படும் என தேவசம்போர்டு தலைவர் வாசு தெரிவித்துள்ளார்.

சபரிமலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மண்டல - மகரவிளக்கு காலம் நிறைவு கட்டத்தை நெருங்கி உள்ளது. மண்டல காலத்தில் சபரிமலை நிர்வாக அதிகாரி உட்பட தேவசம்போர்டு ஊழியர்கள், போலீசார், பக்தர்கள் என, 423 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால், சபரிமலையை தடை செய்யப்பட்ட பாதுகாப்பு பகுதியாக அறிவிக்க வேண்டும் என, கேரள சுகாதார துறை கூறியது. ஆனால், சூழ்நிலையை தேவசம்போர்டு விளக்கியதால் அது தவிர்க்கப்பட்டது.பொருளாதார நெருக்கடிதேவசம்போர்டின் வருமானம் சபரிமலையை நம்பியுள்ளது” என்று கூறினார்.
திருப்பதி மலையில் செம ஷாக்; அப்படியே ஆடிப் போன பக்தர்கள்!
மேலும் அவர், “மார்ச் முதல் சபரிமலை வருமானம் நின்று விட்டதால், கடுமையான பொருளாதார நெருக்கடி உள்ளது. மாநில அரசு, 70 கோடி ரூபாய் மானியம் தந்துள்ளது. சம்பளம் மற்றும் செலவினங்களுக்காக மாதம், 50 கோடி ரூபாய் வேண்டும். மகர ஜோதி ஜனவரி 13ஆம் தேதி இரவு வரை வரும் பக்தர்கள், தரிசனத்துக்கு பின் திரும்பி விட வேண்டும். 14ஆம் தேதி வரும், 5,000 பக்தர்கள் மகர ஜோதி தரிசனம் நடத்தி செல்ல அனுமதிக்கப்படுவர்” என்று தெரிவித்தார்.

சசிகலா விடுதலையில் பெரிய சிக்கல்: டெல்லி பறந்த தினகரன்?

“சீசனில் வரமுடியாமல் போன பக்தர்களுக்காகவும், வருமான இழப்பை சரிகட்டும் வகையிலும், கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பின், மாத பூஜைக்கு நடை திறக்கும் நாட்களை, ஐந்தில் இருந்து, 10 ஆக அதிகரிப்பது பற்றி பரிசீலனை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக, தந்திரியுடன் ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும்” என தேவசம்போர்டு தலைவர் வாசு கூறினார்.

அடுத்த செய்தி