ஆப்நகரம்

முதல்முறை இப்படியொரு ’ஷாக்’ - கொத்து கொத்தாக அள்ளிய கொரோனா!

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவிற்கு பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 10 Aug 2020, 7:36 am
இந்தியாவில் நேற்று புதிதாக 63,851 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,007 பேர் பலியாகி இருக்கின்றனர். இதன்மூலம் மொத்த பாதிப்பு 22,14,269ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் குணமடைந்த நபர்களின் எண்ணிக்கை 15,30,070ஆக உயர்ந்துள்ளது ஆறுதலை அளிக்கிறது. அதாவது நாட்டின் ஒட்டுமொத்த பாதிப்பில் 69 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 6.4 லட்சம் பேர் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த வாரம் இந்தியாவிற்கு மிக மோசமான வாரமாக அமைந்தது. இந்த காலக்கட்டத்தில் புதிதாக 4.1 லட்சம் பேர் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டனர்.
Samayam Tamil Coronavirus in India


அதற்கு முந்தைய வாரங்களில் முறையே 3.7 லட்சம், 3.2 லட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். கடந்த வாரம் 900 என்று பதிவாகிக் கொண்டிருந்த பலி எண்ணிக்கை ஞாயிறு அன்று உச்சம் தொட்டது. புதிய பாதிப்புகள் 63,000ஐ தாண்டிய நிலையில் ஒரே நாளில் பதிவான இரண்டாவது புதிய உச்சமாக பதிவாகியுள்ளது. கடந்த சனிக்கிழமை அன்று 65,410 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகினர். மாநிலங்களைப் பொறுத்தவரை மகாராஷ்டிராவில் நேற்று 12,248 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அம்மாநிலத்தில் பதிவாகியுள்ள இரண்டாவது அதிகபட்ச எண்ணிக்கை ஆகும்.

ஆபத்தில் பயணிகள், உதவிக்கரம் நீட்ட ஓடிவரும் மக்கள் - நெகிழ்ச்சியூட்டும் கேரளா!

பலி எண்ணிக்கை 390ஆக பதிவாகியுள்ளது. மும்பையில் 1,066 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் புதிதாக 10,820 பேருக்கு நோய்த் தொற்று பதிவாகியுள்ளது. இது அம்மாநிலத்தில் பதிவான புதிய உச்சம் ஆகும். 97 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 2,036ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் புதிய கோவிட்-19 பாதிப்பு 5,994ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

119 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக 1,000க்கும் குறைவாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 6,020 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தற்போது தமிழகத்தில் 53,336 தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கர்நாடகாவில் புதிதாக 5,985 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 107 பேர் பலியாகியுள்ளனர்.

சீன முகவரி, மர்ம விதைகள்; இந்தப் பார்சல் வந்தால் உஷார் - எச்சரிக்கும் மத்திய அரசு!

பெங்களூருவில் புதிதாக 1,948 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 22 பேர் பலியாகியுள்ளனர். தற்போது 80,973 பேர் தொடர் சிகிச்சை பெற்று வருகிறது. 4,670 பேர் நேற்று குணமடைந்துள்ளனர். மொத்த பாதிப்பு 1,78,087ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் பலி எண்ணிக்கை 3,198ஆக உயர்ந்துள்ளது.

அடுத்த செய்தி