ஆப்நகரம்

வாரணாசியில் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து: 12 பேர் பலி!

உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் பலியாகியுள்ளனர்.

Samayam Tamil 15 May 2018, 8:35 pm

ஹைலைட்ஸ்:

உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் பலியாகியுள்ளனர்.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil varanasi.
உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் பலியாகியுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசி கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் மேம்பால கட்டுமானப் பணிகள் நடந்து வந்தது. இந்த நிலையில், இந்த மேம்பாலத்தில் ஒரு பகுதி திடீரென்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. தற்போது விபத்து ஏற்பட்ட பகுதியில் மீட்புப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும், ஆம்புலன்ஸ் வேன்களும் அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், இந்த விபத்தில், 12 பேர் பலியாகியுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து, உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, துணை முதல்வர் கே.பி மௌரியா மற்றும் அமைச்சர் நீல்கந்த் திவாரி ஆகியோரை விபத்து ஏற்பட்ட பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு மீட்புப்பணியை தீவிரப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்