ஆப்நகரம்

அடுத்தடுத்து மயங்கி விழுந்த 200 பேர்; என்ன வியாதினு தெரியாமல் விழிக்கும் மருத்துவர்கள்!

நூற்றுக்கணக்கான மக்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 6 Dec 2020, 4:30 pm
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள எலுரு நகரில் ஏராளமானோர் திடீரென இன்று மயங்கி விழுந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 228 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எலுரு நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இவர்கள், எந்தவொரு பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இவர்களை ஆராய்ந்து பார்த்த மருத்துவர்கள் என்ன பிரச்சினை என்று தெரியவில்லை என்று கூறியுள்ளனர். அதேசமயம் எபிலெப்சி நோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த சூழலில் 70 பேர் உடல்நிலை சீராகி வீடு திரும்பியுள்ளனர்.
Samayam Tamil AP People


அதேசமயம் 76 பெண்கள் மற்றும் 46 குழந்தைகள் வெவ்வேறு மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக இந்த மர்ம நோயால் முதியவர்கள், குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் 6 வயது சிறுமியின் உடல்நிலை மோசமடைந்ததால் விஜயவாடாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி தகவலறிந்து மருத்துவக் குழுவினர் எலுரு நகருக்கு விரைந்து சென்றனர். அவர் பாதிக்கப்பட்ட மக்களை ஆய்வு செய்து வருகின்றனர். ரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.

அடுத்தடுத்து உயிரிழந்த 13 குழந்தைகள்; அதுவும் ஒரே மருத்துவமனையில்!

இந்த சம்பவம் தொடர்பாக பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் அல்லா நானி, அனைத்து நோயாளிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. யாருக்கும் தொற்று இல்லை. எலுரு மருத்துவமனையில் கூடுதலாக 150 படுக்கைகளும், விஜயவாடாவில் 50 படுக்கைகளும் சேர்க்க உத்தரவிட்டுள்ளேன்.

யாருடைய உயிருக்கும் பாதிப்பில்லை. அனைவருக்கும் போதிய சிகிச்சை அளித்து மீட்டுக் கொண்டு வரும் முயற்சியில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நேரடியாக கேட்டறிந்து வருவதாக தெரிவித்தார்.

அடுத்த செய்தி