ஆப்நகரம்

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி: அடேங்கப்பா இத்தனை கோடியா?

இந்தியாவில் 218 கோடிக்கும் அதிகமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Samayam Tamil 4 Oct 2022, 1:16 pm
இந்தியாவில் கொரோனா தடுப்பூசியை பொறுத்தவரை இன்று காலை 7 மணி நிலவரப்படி 218.80 கோடிக்கும் அதிகமான (2,18,80,50,600) டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன
Samayam Tamil covid vaccine


12-14 வயதிற்குட்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி, 16 மார்ச் 2022 முதல் செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை, ஏறத்தாழ 4.10 கோடிக்கும் அதிகமான (4,10,44,847) இளம் பருவத்தினருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

18-59 வயதுடையவர்களுக்கு கொரோனா முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தும் பணி 10 ஏப்ரல் 2022 அன்று தொடங்கியது.
தேவரின் தங்க கவசத்தை பெற அதிமுகவில் யாருக்கு அதிகாரம்? முடிவு எப்போது தெரியும்?
இந்தியாவில் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 34,598. நாட்டின் மொத்த நோய் தொற்று உள்ளவர்கள் தற்போது 0.08 சதவீதமாக உள்ளனர்.

இதை தொடர்ந்து இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.74 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,481 பேர் குணமடைந்துள்ளனர். பெருந்தொற்றின் தொடக்கத்திலிருந்து இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,40,36,152.
ஐந்து நாள்களுக்கு மழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,968 புதிய நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 2,09,801 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை மேற்கொள்ளப்பட்ட மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 89.59 கோடி (89,59,58,696) வாராந்திரத் தொற்று 0.94 சதவீதமாக உள்ளது. தினசரித் தொற்று விகிதம் 1.29 சதவீதமாக பதிவாகியுள்ளது.

அடுத்த செய்தி