ஆப்நகரம்

இத்தனை ஆயிரம் பேர் வெளிநாட்டவர்களா? அசாம் நிலவரத்தை போட்டு உடைத்த மத்திய அரசு!

மக்களவையில் வெளிநாட்டவர்கள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலை இங்கே காணலாம்.

Samayam Tamil 21 Sep 2020, 12:50 pm
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி சவுகதா ராய் மக்களவையில் நேற்றைய தினம் சில கேள்விகளை முன்வைத்தார். அதாவது, அசாமில் தங்கியிருக்கக் கூடிய சந்தேகத்திற்குரிய வாக்காளர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மற்றும் வெளிநாட்டவர்கள் என்று அடையாளம் காணப்பட்டவர்கள் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், அசாமில் சந்தேகத்திற்குரிய வாக்காளர்கள் மீது நிலுவையில் இருக்கும் வழக்குகள் 83,008 ஆகும். 2015 முதல் ஜூன் 30, 2020 வரை வெளிநாட்டவர்கள் என்று அடையாளம் காணப்பட்டவர்கள் 86,756 பேர் ஆவர்.
Samayam Tamil Foreigners in Assam


சட்டவிரோத அகதிகள் அல்லது வெளிநாட்டவர்களின் தேவைக்கேற்ப மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மூலம் தடுப்பு மையங்கள் அமைக்கப்படுகின்றன. ஆனால் எத்தனை மையங்கள் இருக்கின்றன, தடுப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டவர்கள் எண்ணிக்கை குறித்த தகவல்கள் பொதுவெளியில் பராமரிக்கப்பட்டு வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் மற்றொரு கேள்விக்கு பதிலளித்த உள்துறை இணையமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி, வடகிழக்கு மாநிலங்களில் பயன்பாட்டில் இருக்கும் உள்நாட்டு நுழைவு அனுமதிச் சீட்டு(ILP) முறையை நீக்கும் திட்டம் ஏதும் மத்திய அரசிடம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

நம்பிக்கையில்லா தீர்மானம் நிரகாரிப்பு; எம்.பிக்கள் சஸ்பெண்ட் - பரபரப்பில் மாநிலங்களவை!

கடந்த 1873ஆம் ஆண்டில் இருந்து உள்நாட்டு நுழைவு அனுமதிச் சீட்டு முறை இந்தியாவில் அமலில் இருக்கிறது. இது அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களுக்குச் செல்வோருக்குப் பொருந்தும். அப்பகுதிக்கு சுற்றுலா அல்லது வேலை காரணமாக செல்லும் பிற மாநில அல்லது பிற நாட்டு மக்கள் உள்நாட்டு நுழைவு அனுமதிச் சீட்டு வாங்க வேண்டும்.

இது அப்பகுதி மக்களின் நிலம் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாக்கும் நோக்கில் பிரிட்டிஷ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி