ஆப்நகரம்

கணவர் மீதான கோபத்தால் இரண்டரை வயது மகளை கொன்ற தாய்

கணவர் நடத்தையில் சந்தேகமடைந்த மனைவி பெற்ற குழந்தையை கொன்ற அதிர்ச்சி சம்பவம் திருப்பூரில் நடந்துள்ளது.

Samayam Tamil 13 Sep 2018, 3:55 pm
கணவர் நடத்தையில் சந்தேகமடைந்த மனைவி பெற்ற குழந்தையை கொன்ற அதிர்ச்சி சம்பவம் திருப்பூரில் நடந்துள்ளது.
Samayam Tamil 201809122207472277_Husband-suspected-of-killing-my-child-mother-statement-in_SECVPF
கணவர் மீதான கோபத்தில் மகளை கொன்ற தாய்


சென்னை குன்றத்தூரை சேர்ந்த அபிராமி என்ற பெண், கள்ளக்காதலனுக்காக பெற்ற இரண்டு குழந்தைகளை கொன்ற சம்பவம். மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அந்த சோகத்தில் இருந்து தமிழகமே இன்னும் மீளாத சூழ்நிலையில், திருப்பூரில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. கணவர் மீதான கோபத்தால் மனைவி பெற்ற குழந்தையை கொன்றுள்ளார்.

திருப்பூரை அடுத்துவுள்ள சாமளாபுரம் பகுதியில் கூலி வேலை செய்து வருபவர் நாகராஜ் (23). இவருக்கு இசக்கி (21) என்ற மனைவியும், சிவன்யா ஸ்ரீ என்ற 2 வயது குழந்தையும் உள்ளனர்.

காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு இடையில் சமீப காலமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது அருகில் வசிக்கும் நாகராஜின் தாய் சமாதானம் செய்து விளக்கி விடுவார்.

சம்பவம் நடந்த அன்று நாகராஜன் வேலைக்கு சென்று திரும்பியுள்ளார். அப்போது வீட்டுக்கு பின்னால் சென்று பார்த்த போது, அவரது 2 வயது குழந்தை தொட்டியில் மூழ்கிய நிலையில் இருந்துள்ளாள்.

இதனை அடுத்து குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்று போது, மருத்துவர்கள் குழந்தை சிவன்யா ஸ்ரீ ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து நாகராஜ் மனைவி இசக்கியிடம் போலீசார் விசாரணை செய்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேச தீவிரமாக விசாரணை செய்த போலீசார், அவர் குழந்தையை கொன்றதை உறுதி செய்தனர்.

இதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இரண்டரை வயது குழந்தையை தாய் கொன்ற சம்பவம் திருப்பூரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி