ஆப்நகரம்

பணத்திற்காக விற்கப்பட்ட சிறுவன் சித்ரவதை - தாய் கைது

மத்தியப் பிரதேசத்தில் பணத்திற்காக பெற்ற மகனை விற்ற தாய் கைது செய்யப்பட்டார். பல்வேறு கொடுமைகளுக்கு ஆளான சிறுவன் மீட்கப்பட்டு, அவனது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டான்.

TNN 22 Jun 2016, 4:25 pm
போபால்: மத்தியப் பிரதேசத்தில் பணத்திற்காக பெற்ற மகனை விற்ற தாய் கைது செய்யப்பட்டார். பல்வேறு கொடுமைகளுக்கு ஆளான சிறுவன் மீட்கப்பட்டு, அவனது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டான்.
Samayam Tamil mother sold her boy tortured arrested saved
பணத்திற்காக விற்கப்பட்ட சிறுவன் சித்ரவதை - தாய் கைது


மத்திய பிரதேச மாநிலம் சட்னா மாவட்டத்தை சேர்ந்தவர் லட்சுமி சவுத்ரி. இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தனது மகன் சிவத்தை உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தை சேர்ந்த குட்டு மற்று ஜஹாகிர் அலி தம்பதிக்கு ரூ.50,000க்கு விற்றுள்ளார்.

9 வயதில் விற்கப்பட்ட சிறுவனை குட்டு தம்பதியினர் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கியுள்ளனர். சிவத்தை அடித்து, பட்டினி போட்டு, தனி அறையில் அடைத்து துன்புறத்தியுள்ளனர். மேலும் அவனை இஸ்லாம் மதத்திற்கு மாற்றி சோனு அலி என்று பெயரிட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு, சிவம் தனது இருப்பிடத்தில் இருந்து தப்பிச் சென்று மிர்சாபூர் போலீசாரிடம் அடைக்கலம் புகுந்தான். அவனுக்கு குழந்தைகள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் இருப்பிடம் அளித்தனர்.

இதையடுத்து மனைவியை பிரிந்து வாழும் சிவத்தின் தந்தையிடம் சிறுவனை ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து போலீசாருக்கு அளித்த புகாரின் பேரில், மதச் சுதந்திர சட்டத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் வேறு ஒரு கணவருடன் வசித்து வரும் லட்சுமி சவுத்ரியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி