ஆப்நகரம்

அன்னை தெரசாவுக்கு செப்.,4-ல் புனிதர் பட்டம்

மறைந்த பின்னரும் இரண்டு அற்புதங்களை நிகழ்த்திய அன்னை தெரசாவுக்கு வருகிற செப்டம்பர் 4-ம் தேதியன்று புனிதர் பட்டம் வழங்கப்படவுள்ளது.

TNN 24 Aug 2016, 5:51 pm
வாட்டிகன் சிட்டி: மறைந்த பின்னரும் இரண்டு அற்புதங்களை நிகழ்த்திய அன்னை தெரசாவுக்கு வருகிற செப்டம்பர் 4-ம் தேதியன்று புனிதர் பட்டம் வழங்கப்படவுள்ளது.
Samayam Tamil mother teresa sainthood by september 4th
அன்னை தெரசாவுக்கு செப்.,4-ல் புனிதர் பட்டம்


இறந்த பின்னரும் நோயாளிகளை குணப்படுத்தி வரும் தூய ஆவிகளுக்கு, வாட்டிகன் சிட்டியில் உள்ள கத்தோலிக்க திருச்சபை புனிதர் பட்டம் வழங்குவது வழக்கம். புனிதர் பட்டத்திற்கு இரண்டு அற்புதங்களை நிகழ்த்தியிருக்க வேண்டும்.

அதன்படி, மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த மோனிகா பெர்ஸா என்ற பெண்ணின் வயிற்றில் இருந்த கட்டியை அன்னைதெரசா கடந்த 1998-ஆம் ஆண்டு குணப்படுத்தியதாக தகவல் வெளியானது. பல்வேறு ஆய்வுகளுக்கு அன்னை தெரசா தூய ஆவியாக வந்து இந்த அற்புதத்தை நிகழ்த்தியதாக வாடிகன் கத்தோலிக்க சபை ஏற்றுக் கொண்டது.

அதனையடுத்து, கடந்த 2003-ஆம் ஆண்டில் சுமார் 3 லட்சம் யாத்ரீகர்கள் கலந்து கொண்ட விழாவில், அப்போதைய போப் ஆண்டவர் இரண்டாம் ஜான்பால், அன்னை தெரசாவுக்கு அருளாளர் பட்டம் வழங்கி கவுரவித்தார். புனிதர் பட்டத்துக்கான முதற்படியே இந்த அருளாளர் பட்டம்.

அதனைத்தொடர்ந்து, பிரேசில் நாட்டை சேர்ந்த, மூளைக் கட்டியால் பாதிக்கப்பட்ட ஒருவரை அன்னை தெரசா குணப்படுத்தியுள்ளார். அன்னை தெரசாவின் இந்த இரண்டாவது அற்புதத்தை தற்போதைய போப் பிரான்சிஸ் அங்கீகரித்தார். அதனையடுத்து, இரண்டு அற்புதங்களை நிகழ்த்திய அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்க போப் பிரான்சிஸ் ஒப்புதல் அளித்தார்.

மேலும், போப்பின் 50-வது கருணை ஆண்டான இந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் விழாவின் போது, அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்படலாம் என முன்னதாக கூறப்பட்டது.

அதன்படி, வருகிற செப்டம்பர் மாதம் 4-ம் தேதியன்று அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்படவுள்ளது. இவ்விழாவில் கலந்து கொள்ள இந்தியாவில் இருந்து ஏராளமானோர் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி