ஆப்நகரம்

பாலியல் வல்லுறவு குற்றவாளிகளுக்குத் தூக்கு: அமைச்சரவை அதிரடி

பாலியல் வல்லுறவு வழக்குகளில் குற்றவாளிகளை தூக்கிலிடும் சட்ட மசோதாவை மத்தியப் பிரதேச அமைச்சரவை நிறைவேற்றியுள்ளது.

TNN 26 Nov 2017, 7:01 pm
போபால்: பாலியல் வல்லுறவு வழக்குகளில் குற்றவாளிகளை தூக்கிலிடும் சட்ட மசோதாவை மத்தியப் பிரதேச அமைச்சரவை நிறைவேற்றியுள்ளது.
Samayam Tamil mp cabinet approves death sentence for rape convicts in the cases involving girls of 12 years of age and below
பாலியல் வல்லுறவு குற்றவாளிகளுக்குத் தூக்கு: அமைச்சரவை அதிரடி


மத்தியப் பிரதேசத்தில் பாஜகவின் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான அரசின் ஆட்சி நடைபெறுகிறது. அம்மாநிலத்தின் சட்டப்பேரவை குளிர்கால கூட்டத் தொடரில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் பாலியல் வல்லுறவு குற்றங்களுக்கு எதிரான தண்டனைகளில் திருத்தம் செய்யும் சட்ட மசோதா நிறைவேறியது.

12 வயது அல்லது அதற்குக் குறைவான வயதுடைய சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க இந்த சட்ட மசோதா இடமளிக்கிறது. மேலும், கூட்டுப் பாலியல் வல்லுறவில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை வழங்க இதில் இடமளிக்கப்பட்டுள்ளது.
#MadhyaPradesh Cabinet approves death sentence for rape convicts in the cases involving girls of 12 years of age and below. pic.twitter.com/CbLRvLktGg — ANI (@ANI) November 26, 2017 பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் அளிக்கப்படும் அபராதத் தொகையை அதிகரிக்கவும் இந்த மசோதா வழி வகுக்கிறது.

அடுத்த செய்தி