நீமச்: டீ விற்பவரின் மகளான ஆஞ்சல் கங்வால் இந்திய விமானப் படைக்கு தேர்வாகியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் நீமச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆஞ்சல் கங்வால்(24). இவரது தந்தை சுரேஷ் கங்வால் நீமச் பேருந்து நிலையத்தில் டீ கடை நடத்தி வருகிறார். கடந்த 2013ஆம் ஆண்டு, உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது, மீட்பு பணிக்கு ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டனர்.
அவர்களின் செயலைக் கண்ட ஆஞ்சல் கங்வால் மிகவும் உந்துதல் அடைந்தார். எனவே தானும் அத்தகைய படையில் சேர வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அவரது குடும்ப சூழ்நிலை மிகவும் வறுமையில் தவித்து வருகிறது. இருப்பினும் ஏர் போர்ஸ் பொது நுழைவுத் தேர்வு எழுதத் தொடங்கினார்.
5 முறை தொடர் தோல்விக்கு பின்னர், 6வது முறை வெற்றி பெற்றுள்ளார். இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த 7ஆம் தேதி வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் தேர்வான 22 பேரில், ஆஞ்சல் கங்வாலும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்து தேர்வான ஒரே நபரும் ஆவார்.
இந்தத் தேர்வை 6 லட்சம் பேர் எழுதினர். தனது மகளின் வெற்றியின் மூலம், ‘நம்தேவ் டீ கடையை’ பலரும் அறிவர் என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார். வறுமையில் வாடும் சுரேஷ், கடன் வாங்கி ஆஞ்சலை பயிற்சி வகுப்பிற்கும், மூத்த மகனை பொறியியல் படிப்பிற்கும் அனுப்பியுள்ளார்.
இளைய மகள் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். வரும் 30ஆம் தேதி, ஐதராபாத்தில் உள்ள துண்டிகுல் ஏர் போர்ஸ் அகாடமியில் ஆஞ்சல் சேர கடிதம் வந்துள்ளது.
MP tea seller's daughter makes it to IAF.
மத்தியப் பிரதேச மாநிலம் நீமச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆஞ்சல் கங்வால்(24). இவரது தந்தை சுரேஷ் கங்வால் நீமச் பேருந்து நிலையத்தில் டீ கடை நடத்தி வருகிறார். கடந்த 2013ஆம் ஆண்டு, உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது, மீட்பு பணிக்கு ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டனர்.
அவர்களின் செயலைக் கண்ட ஆஞ்சல் கங்வால் மிகவும் உந்துதல் அடைந்தார். எனவே தானும் அத்தகைய படையில் சேர வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அவரது குடும்ப சூழ்நிலை மிகவும் வறுமையில் தவித்து வருகிறது. இருப்பினும் ஏர் போர்ஸ் பொது நுழைவுத் தேர்வு எழுதத் தொடங்கினார்.
5 முறை தொடர் தோல்விக்கு பின்னர், 6வது முறை வெற்றி பெற்றுள்ளார். இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த 7ஆம் தேதி வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் தேர்வான 22 பேரில், ஆஞ்சல் கங்வாலும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்து தேர்வான ஒரே நபரும் ஆவார்.
இந்தத் தேர்வை 6 லட்சம் பேர் எழுதினர். தனது மகளின் வெற்றியின் மூலம், ‘நம்தேவ் டீ கடையை’ பலரும் அறிவர் என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார். வறுமையில் வாடும் சுரேஷ், கடன் வாங்கி ஆஞ்சலை பயிற்சி வகுப்பிற்கும், மூத்த மகனை பொறியியல் படிப்பிற்கும் அனுப்பியுள்ளார்.
இளைய மகள் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். வரும் 30ஆம் தேதி, ஐதராபாத்தில் உள்ள துண்டிகுல் ஏர் போர்ஸ் அகாடமியில் ஆஞ்சல் சேர கடிதம் வந்துள்ளது.
MP tea seller's daughter makes it to IAF.