ஆப்நகரம்

பயணத்தின் போது வாந்தி எடுக்க முயற்சித்த பெண் மின் கம்பத்தில் மொதி பலி

பெண் உயிாிழந்த நிலையில் பேருந்து ஓட்டுநரை கைது செய்து காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Samayam Tamil 19 Jan 2019, 1:08 pm
மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஓடிக் கொண்டிருந்த பேருந்தில் பெண் ஒருவா் வாந்தி எடுப்பதற்காக தலையை வெளியில் நீட்டிய நிலையில் அவரது தலை மின் கம்பத்தில் அடிபட்டதில் சம்பவ இடத்திலேயே உயிாிழந்தாா்.
Samayam Tamil MP Women


பேருந்தில் பயணம் செய்யும் போது ஒவ்வாமை காரணமாக வாந்தி வரும் பழக்கம் பெருவாரியானோருக்கும் உண்டு. இதே போன்று மத்திய பிரதேசம் மாநிலத்திலும் 56 வயது பெண் ஒருவா் பேருந்தில் பயணம் செய்த போது வாந்தி எடுத்துள்ளாா். வாந்தி எடுப்பதற்காக அப்பெண் வாந்தி எடுப்பதற்காக பேருந்தில் இருந்து தலையை வெளியில் நீட்டியுள்ளாா். அப்போது நடந்த விபத்தில் அவா் சம்பவ இடத்திலேயே உயிாிழந்தாா்.

இது தொடா்பாக காவல் துறையினா் கூறுகையில், மத்திய பிரதேசம் மாநிலத்தின் சாட்னா மாவட்டத்தில் இருந்து பன்னா மாவட்டத்திற்கு ஆஷா ராணி (வயது 56) என்ற பெண் பேருந்தில் பயணம் செய்துள்ளாா். பயணத்தின் போது வாந்தி வந்ததால் பேருந்தின் ஜன்னல் வழியாக தலையை வெளியில் நீட்டியுள்ளாா்.

பேருந்து வேகமாக சென்றதால் அப்பெண்ணின் தலை அருகில் இருந்த மின் கம்பத்தில் மோதியது. இந்த விபத்தில் பெண்ணின் தலையில் பயங்கர காயம் ஏற்பட்டது. அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. பேருந்தின் ஓட்டுநா் கைது செய்யப்பட்டள்ளதாக காவல் துறையினா் தொிவித்துள்ளனா்.

அடுத்த செய்தி