சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் போது, சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவ் எதிர்க்கட்சிகள் வரிசையில் அமர்ந்திருந்தார். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடி சிறப்பாக செயல்படுகிறார். மீண்டும் அவர் பிரதராக வர வேண்டும் என்று கூறினார். இந்த செயல் அருகில் அமர்ந்திருந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் புன்முறுவலுடன் சமாளித்துக் கொண்டார்.
முலாயமின் செய்கை சக கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்வாறு பேசியதற்கு எதிர் வரிசையில் அமர்ந்திருந்த பிரதமர் மோடி, கைகூப்பி நன்றி தெரிவித்தார்.
இந்நிலையில் முலாயம் சிங் யாதவின் பேச்சு, அவரது மகனும் சமாஜ்வாதி கட்சி தலைவர் மற்றும் முன்னாள் உ.பி., முதல்வருமான அகிலேஷ் யாதவிற்கு பெரும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஏனெனில் அவர் பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளுடன் சேர்ந்து, வரும் மக்களவை தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். முன்னதாக நாடாளுமன்றத்தில் இருந்து வெளியே வந்த முலாயம் சிங், மோடியை புகழ்ந்தது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.
முலாயம் சிங் பேச்சால் அவரது குடும்பத்திற்குள் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சிவ்பால் யாதவ் தனியாக கட்சி தொடங்கி விலகிச் சென்றுள்ளார். அவர் உத்தரப்பிரதேச மாநிலத்தின் 80 தொகுதிகளிலும் போட்டியிட திட்டமிட்டுள்ளார்.
இதுகுறித்து பேசிய உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், நாடாளுமன்றத்தில் முலாயம் சிங் பேசியது உண்மை. இதனை அவரது மகன் ஏற்றுக் கொள்வார் என்று நம்புகிறேன் என்றார்.
முலாயமின் செய்கை சக கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்வாறு பேசியதற்கு எதிர் வரிசையில் அமர்ந்திருந்த பிரதமர் மோடி, கைகூப்பி நன்றி தெரிவித்தார்.
இந்நிலையில் முலாயம் சிங் யாதவின் பேச்சு, அவரது மகனும் சமாஜ்வாதி கட்சி தலைவர் மற்றும் முன்னாள் உ.பி., முதல்வருமான அகிலேஷ் யாதவிற்கு பெரும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஏனெனில் அவர் பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளுடன் சேர்ந்து, வரும் மக்களவை தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். முன்னதாக நாடாளுமன்றத்தில் இருந்து வெளியே வந்த முலாயம் சிங், மோடியை புகழ்ந்தது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.
முலாயம் சிங் பேச்சால் அவரது குடும்பத்திற்குள் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சிவ்பால் யாதவ் தனியாக கட்சி தொடங்கி விலகிச் சென்றுள்ளார். அவர் உத்தரப்பிரதேச மாநிலத்தின் 80 தொகுதிகளிலும் போட்டியிட திட்டமிட்டுள்ளார்.
இதுகுறித்து பேசிய உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், நாடாளுமன்றத்தில் முலாயம் சிங் பேசியது உண்மை. இதனை அவரது மகன் ஏற்றுக் கொள்வார் என்று நம்புகிறேன் என்றார்.