ஆப்நகரம்

நடனமாட மறுத்த நண்பனை கொன்ற இளைஞர் கைது

பிறந்தநாள் பார்ட்டியில் நடனமாட மறுத்த நண்பனை கொலை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

PTI 15 Feb 2017, 1:37 pm
மும்பை: பிறந்தநாள் பார்ட்டியில் நடனமாட மறுத்த நண்பனை கொலை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil mumbai 25 year old killed by friend for refusing to dance
நடனமாட மறுத்த நண்பனை கொன்ற இளைஞர் கைது


அந்தேரி பகுதியில் கேதன் ஷிர்வாத்கர் ஏற்பாடு செய்திருந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது, பாலிவுட் பாடல் ஒன்றுக்கு தனது நண்பன் அங்குஷ் ஜாதவை நடனமாடுமாறு வற்புறுத்தியுள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதம் முற்றி கைக்கலப்பு ஏற்பட்டது.

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றிருந்த சிலர் இருவரையும் தடுக்க முயற்சித்தபோது, ஆத்திரமடைந்த ஷிர்வாத்கர், அங்குஷின் தலையில் மரப் பலகையால் ஓங்கி அடித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த அங்குஷ் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகுக் கொண்டு செல்லப்பட்டார்.

அங்குஷை பரிசோதித்த மருத்துவர்கள் ஆழமான காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்ததால் அங்குஷ் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ஷிர்வாதகர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

A 25-year-old man was allegedly killed by his friend for refusing to dance at a birthday party here, police said on Wednesday.

அடுத்த செய்தி