ஆப்நகரம்

நிவர் புயலால் இப்படியும் ஒரு நன்மை; நிம்மதி பெருமூச்சு விட்ட மும்பைவாசிகள்!

மும்பை நகரில் நிவர் புயலுக்கு பிறகான மாற்றம் குறித்து இங்கே விரிவாக காணலாம்.

Samayam Tamil 29 Nov 2020, 4:14 pm
வங்கக்கடலில் உருவான நிவர் புயல் கடந்த 25ஆம் தேதி காரைக்கால் மற்றும் புதுச்சேரிக்கு இடையில் கரையைக் கடந்தது. இதனால் தென்னிந்திய மாநிலங்களில் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அதேசமயம் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் காற்றின் தரம் சற்றே மேம்பட்டுள்ளது. நிவர் புயலுக்கு பிறகான காற்றின் சுழலால் மாசு நீங்கி பெரிதும் தூய்மையாகி இருக்கிறது. காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி (SAFAR) அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, மும்பை நகரின் தற்போதைய காற்றின் தர அளவீடு (AQI) 125ஆக காணப்படுகிறது.
Samayam Tamil AQI in Mumbai


பொதுவாக 101 - 200 என்ற அளவில் காற்றின் தரம் இருந்தால் அது நடுத்தரமானது. அதாவது லேசான சுகாதார பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். இந்த சூழலில் கடந்த வெள்ளி அன்று மும்பையில் 235 என்ற மோசமான நிலையில் காற்றின் தரம் இருந்தது. அப்போது காற்றின் வேகம் மிகவும் குறைவாக காணப்பட்டது. இதற்கடுத்த சனிக்கிழமை (நவம்பர் 28) புயல் பாதிப்பு காரணமாக காற்று மிக வேகமாக வீசியுள்ளது.

இதன்மூலம் மாசடைந்த காற்று வெளியேறி புத்துணர்ச்சி மிக்க காற்று உள்நுழைந்துள்ளது. மும்பை நகரின் 10 இடங்களில் காற்றின் தரத்தை SAFAR ஆய்வு செய்தது. அதில் மஸ்கோவனில் 242 என்ற மோசமான நிலையில் காற்றின் தரம் இருந்துள்ளது. குறைந்தபட்சமாக பந்தப் பகுதியில் 65ஆக உள்ளது.

தேசிய அடையாளத்தை இழக்கிறதா இந்தியா? 2020ல் மேலும் ஒரு பகீர் சம்பவம்!

இன்றைய தினம் மும்பையின் காற்று தரம் 120 என்ற நிலைக்கு முன்னேற்றம் காணும் என்று SAFAR கணித்துள்ளது. காற்றின் தரம் மேம்படுவதால் குறைந்தபட்ச வெப்பநிலை சற்றே ஏற்றம் காண்பது வழக்கம்.

அந்த வகையில் சண்டாகிரஸ் மற்றும் கொலாபா வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மும்பை நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 23.2 மற்றும் 24 டிகிரி செல்சியஸாக இருந்தது. இது வழக்கத்தை விட 3 டிகிரி அதிகம் என்பது கவனிக்கத்தக்கது. அதேசமயம் அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறைந்து 34.2 மற்றும் 33.8 டிகிரி செல்சியஸாக பதிவானது.

அடுத்த செய்தி