ஆப்நகரம்

மும்பை புறநகர் பகுதி கட்டிடத்தில் தீ விபத்து; பலி எண்ணிக்கை 7-ஆக அதிகரிப்பு

மும்பை: செம்பூர் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 7 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

Samayam Tamil 28 Dec 2018, 9:14 am
மும்பையின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழப்பு ஏழாக அதிகரித்துள்ளது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து- பலி எண்ணிக்கை அதிகரிப்பு


மும்பையை அடுத்துவுள்ள செம்பூர் பகுதியில் சர்கம் சொசைட்டி என்கிற இடத்தில் பலமாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதன் 11வது மாடியில் திடீரென்று இரவு தீ பிடித்து எரிந்தது.


சிறிது நேரத்திலேயே தீ பல இடங்களுக்கு பரவிய நிலையில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சுமார் 15 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்திறங்கினர். பிறகு தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.


இந்த விபத்தில் பலரும் படுகாயமடைந்த நிலையில், ஆபத்தான நிலையில் காயம் ஏற்பட்டவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லபப்ட்டனர். இதில் செல்லும் வழியிலேயே அவர்கள் உயிரிழந்தனர். மேலும் சிலருக்கு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் இதுவரை 7 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

அடுத்த செய்தி