ஆப்நகரம்

“விஜய் மல்லையா ஆஜராக வேண்டும்” : மும்பை சிறப்பு நீதிமன்றம்

பண மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் விஜய் மல்லையா ஜூலை 29ம் தேதி ஆஜராக வேண்டுமென மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

TOI Contributor 29 Jun 2016, 9:59 pm
பண மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் விஜய் மல்லையா ஜூலை 29ம் தேதி ஆஜராக வேண்டுமென மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
Samayam Tamil mumbai court ask mallaya to present july 29
“விஜய் மல்லையா ஆஜராக வேண்டும்” : மும்பை சிறப்பு நீதிமன்றம்


கிங் ஃபிஷ்ஷர் ஏர் லைன்ஸ் நிறுவன உரிமையாளர் விஜய் மல்லையா, பல வங்கிகளிடம் இருந்து 9000 கோடி ரூபாய் கடன் பெற்றுவிட்டு திருப்ப செலுத்தாமல் வெளிநாடு சென்றுவிட்டார். இதனால் அவர்மீது வழங்கு தொடரப்பட்டது. அவரின் சொத்துக்கள் சில முடக்கப்பட்டன. இதனிடையே மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கில் சிறப்பு நீதிபதி பி.ஆர்.பவேக், ஜூலை 29-ம் தேதி விஜய் மல்லையா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அமலாக்கத்துறை இயக்குநரகம் தீதிமன்ற உத்தரவை செய்தித்தாள்களில் விளம்பரம் செய்ய உள்ளது. இதற்கு முன் மும்பை நீதிமன்றம் இவரை வலியுறுத்தப்பட்ட குற்றவாளியாக அறிவித்திருக்கிறது. மேலும் இந்திய அரசு பிரிட்டனிடம் மல்லையாவை ஒப்படைக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

அடுத்த செய்தி