ஆப்நகரம்

மும்பை தீ விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த 14 பேருக்கு பிரதமர் , குடியரசுத் தலைவர் இரங்கல் !

மும்பை தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களது குடும்பத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

TNN & Agencies 29 Dec 2017, 12:39 pm
மும்பை தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களது குடும்பத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil mumbai fire accident 14 dead president and prime minister expressed condolence message
மும்பை தீ விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த 14 பேருக்கு பிரதமர் , குடியரசுத் தலைவர் இரங்கல் !


மும்பையில் உள்ள அடுக்குமாடி கட்டத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உடல் கருகி உயிரிந்தனர். லோவர் பேரல் என்ற இடத்தில் உள்ள கமலா மில்ஸ் அடுக்குமாடி கட்டட வளாகத்தில் இருந்து உணவகத்தில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

உடனடியாக தீயணைப்பு படையினடர் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் தீ விபத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் , மும்பை தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய கடவுளிடம் வேண்டிக்கொள்வதாக அவர் கூறியுள்ளார். அதேபோல் பிரதமர் மோடியும் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி