ஆப்நகரம்

மும்பை கனழை எதிரொலி: டப்பாவாலாக்கள் சேவை நிறுத்தம் !

மும்பையில் பெய்து வரும் அதிகனமழையால் டாப்பாவாலக்களின் சேவை இன்று நிறுதப்பட்டுள்ளது.

Samayam Tamil 10 Jul 2018, 12:22 pm
மும்பையில் பெய்து வரும் அதிகனமழையால்டாப்பாவாலக்களின் சேவை இன்று நிறுதப்பட்டுள்ளது.
Samayam Tamil Dabbawalas_Mumbai-k52--621x414@LiveMint



மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால்மக்களின்இயல்பு நிலை பாதித்துள்ளது. கனமழை காரணமாகரயில்கள் 15 நிமிடம், தாமதமாக புறப்படும் என்றுமேற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது. மேலும்பல இடங்களில் மழை நீர் முழங்கால் அளவு வரை நிரம்பி உள்ளது. சையன் ரயில் நிலையத்தில் உள்ள ரயில் தண்டவாளம் மழைநீரால் மூழ்கி உள்ளது.


இன்று காலை நிலவரப்படிமும்பை நகர பகுதிகளில் 165. 8 மில்லி மீட்டரும் , மும்பை புறநகர் பகுதிகளில் 184.3 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. மேலும் நல்லசோப்ரா ரயில் நிலையம் முழுமையாக மழை நீரால் மூழ்கியுள்ளது.

இந்நிலையில் நகரின் எல்லா இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் டப்பாவாலாக்களால் உணவுஎடுத்து செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.இது தொடர்பாக டப்பாவாலா ஒருவர் கூறியதாவது ‘ மும்பையின் முக்கியமான இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளாதால்எங்களால் எங்கும் செல்ல முடியவில்லை .மேலும் மழைநிர் முழங்கால் வரை சூழ்ந்துள்ளதால் சைக்கிளை ஓட்ட மிக சிரமமாக இருக்கிறது.

அடுத்த செய்தி