ஆப்நகரம்

கடற்படை சரக்கு கப்பலில் தீ விபத்து

குஜராத்-மகராஷ்டிரா கடல் பகுதியில், நேற்று மாலை கடற்படைக்கு சொந்தமான சரக்கு கப்பலில் திடீரென்று ஏற்பட்ட தீவிபத்தில் 2 பேர் காயமடைந்தனர்.

Samayam Tamil 18 Jan 2018, 10:17 am
குஜராத்-மகராஷ்டிரா கடல் பகுதியில், நேற்று மாலை கடற்படைக்கு சொந்தமான சரக்கு கப்பலில் திடீரென்று ஏற்பட்ட தீவிபத்தில் 2 பேர் காயமடைந்தனர்.
Samayam Tamil mumbai kandla port coastal ship fired
கடற்படை சரக்கு கப்பலில் தீ விபத்து


கடற்படைக்கு சொந்தமான எம்.டி. ஜெனீசா என்ற வர்த்தக கப்பல் ஒன்று குஜராத் மகராஷ்டிரா கடற்பகுதியில் வந்து கொண்டிருந்த போது திடீரென்று தீப்பிடித்தது.

இது குறித்து பாதுகாப்பு துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், சரக்கு கப்பலில், 30 ஆயிரம் டன் அதிவேக டீசல் இருந்த்தாகவும், நேற்று மாலையில், குஜராத் மாநிலம் கண்டலாவில் நிற்கும் போது தீ விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.

விபத்து குறித்து தகவலறிந்த கடலோர காவல் படையினர், கப்பலில் தீக்காயம் அடைந்த இரண்டு பேர் உட்பட 26 பேரை மீட்டனர். விபத்துக்கான காரணம் தொடர்பாக முழுமையான தகவல்கள் வெளிவரவில்லை.

மேலும், தீவிபத்தால், கப்பலில் ஏற்பட்ட சேதம் குறித்தும், கடலில் எண்ணெய் கசிவு ஏதும் கலந்துள்ளதா என்றும் தொடர்ந்தும் ஆய்வு செய்ப்படுகிறது.

அடுத்த செய்தி