ஆப்நகரம்

ரோஹிங்கியாக்கள் வலியை பதிவு செய்து, புலிட்சர் விருது பெற காரணமான இந்தியர் இவர் தான்!

புலிட்சர் விருது பெறக் காரணமான இந்தியர் குறித்து இங்கே காணலாம்.

Samayam Tamil 18 Apr 2018, 1:21 pm
டெல்லி: புலிட்சர் விருது பெறக் காரணமான இந்தியர் குறித்து இங்கே காணலாம்.
Samayam Tamil Danish Siddiqui
டேனிஷ் சித்திக்


2018ஆம் ஆண்டிற்கான புலிட்சர் விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அதில் ரோஹிங்கியாக்களின் துயர வாழ்வை புகைப்படங்களால் பதிவு செய்த ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு புலிட்சர் விருது வழங்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் புகைப்படக் கலைஞராக இருக்கும் டேனிஷ் சித்திக், ஒரு இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கதேசம் மற்றூம் மியான்மர் எல்லைப் பகுதி அருகே ஓடு நதி நஃப். இதன் முகப்பு பகுதியில் ஷா போரிர் தீவுப் பகுதி அமைந்துள்ளது. அங்கு படகில் வந்திறங்கிய பெண், கரையில் நிலை தடுமாறி விழுந்து எழுகிறது. கண்ணீரோடு மனதை சோகத்தால் நிறைக்கும் இந்த காட்சியை டேனிஷ் படம்பிடித்துள்ளார்.

ரோஹிங்கிய அகதிகள்

இதேபோல் படகுகளில் இருந்து இறங்கி செல்லும் ரோஹிங்கிய அகதிகள், தங்கள் கைகளில் மூட்டை முடிச்சுகளுடன் செல்கின்றனர். அவர்களின் பின்புறம் வானம் இருண்டு மேகக் கூட்டங்களுடன் காட்சியளிக்கிறது. இதனையும் சிறப்பாக படம்பிடித்துள்ளார்.

மியான்மரில் தங்கள் இருப்பிடங்கள் ராணுவத்தினரால் சூறையாடி, தீயிடப்பட்ட பின் அகதிகளாக ரோஹிங்கிய மக்கள் வெளியேறினர். இவர்கள் வங்கதேசம், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

டேனிஷ், டெல்லி ஜமியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் பயின்றுள்ளார். இதையடுத்து மாஸ் கம்யூனிகேஷன் படித்து, தனது செய்தி பத்திரிகையாளர் பணியை தொடங்கினார்.

ரோஹிங்கிய அகதிகள்

கடந்த 2009ஆம் ஆண்டு புகைப்பட பத்திரிகையாளராக மாறிய இவர், 2010ல் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்தில் சேர்ந்தார். மொசூல் நகரின் அழிவு, நேபாள நிலநடுக்கம் உள்ளிட்டவை குறித்து எடுத்த புகைப்படங்கள் முக்கியத்துவம் வாய்ந்தது.

MUMBAI LENSMAN DANISH SIDDIQUI’S WORK PART OF PULITZER-WINNING ROHINGYA SERIES.

அடுத்த செய்தி