ஆப்நகரம்

விளையாட்டால் வந்த வினை; சிறை அனுபவிக்கும் கார் மெக்கானிக்

மும்பையில் கார் ஷெட்டில் வேலை பார்க்கும் தொழிலாளி ஒருவர் விளையாட்டுத்தனமாக செய்த காரியம் ஒன்று விபரீதமாகி உள்ளது. சக தொழிலாளி மற்றும் நண்பரின் ஆசனவாயில் கார் கிளீன் செய்யப் பயன்படும் உயரழுத்த காற்று டியூபை சொருகியுள்ளார். இதனால் அவர் ரத்த வாந்தி எடுத்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

Samayam Tamil 27 Feb 2019, 6:13 pm
மும்பையில் கார் ஷெட்டில் வேலை பார்க்கும் தொழிலாளி ஒருவர் விளையாட்டுத்தனமாக செய்த காரியம் ஒன்று விபரீதமாகி உள்ளது. சக தொழிலாளி மற்றும் நண்பரின் ஆசனவாயில் கார் கிளீன் செய்யப் பயன்படும் உயரழுத்த காற்று டியூபை சொருகியுள்ளார். இதனால் அவர் ரத்த வாந்தி எடுத்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
Samayam Tamil arrest


கார் ஷெட்டில் வேலை பார்க்கும் தொழிலாளி அரேக்கர் (46). இவரது நண்பர் யாகூப் (48). அரேக்கர் விளையாட்டுத்தனமாக செய்த காரியம் ஒன்று விபரீதமாகி உள்ளது. 2015ம் ஆண்டு கார் ஷெட்டில் வேலை பார்த்துக்கொண்டு இருந்த சமயத்தில் அரேகருக்கும் யாகூப்புக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது. இதனால் அரேக்கர் சக தொழிலாளி மற்றும் நண்பர் யாகூப்பின் ஆசனவாயில் கார் கிளீன் செய்யப் பயன்படும் உயரழுத்த காற்று டியூபை சொருகியுள்ளார். இதனால் அவர் ரத்த வாந்தி எடுத்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இதனையடுத்து அரேக்கர் கைது செய்யப்பட்டார்.

அவர் இதனை வேண்டுமென்றே கொலை செய்யும் நோக்கத்தில் செய்யவில்லை என்ற காரணத்தால் அப்போது இவ்வழக்கை விசாரித்த கீழ் நீதிமன்றம் அரேக்கர் யாகூப் குடும்பத்துக்கு நஷ்ட ஈடாக 50,000 வழங்க உத்தரவிட்டது. யாகூப்பின் மனைவி இவ்வழங்கை உயர்நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றார். தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது. அரேக்கருக்கு நான்கு ஆண்டு சிறை வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி