ஆப்நகரம்

மனநலம் பாதித்த நபர் மரத்தில் கட்டிவைத்து அடித்து கொலை.!

மும்பை, தானே அருகே, இளைஞர் ஒருவரை மரத்தில் தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TNN 3 Nov 2017, 2:51 pm
மும்பை, தானே அருகே, இளைஞர் ஒருவரை மரத்தில் தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil mumbai mentally challenged human killed by some people
மனநலம் பாதித்த நபர் மரத்தில் கட்டிவைத்து அடித்து கொலை.!


மும்பை தானே பகுதியில், 28 வயது மதிக்கத்தக்க இளைஞரின் கை-கால்கள் கட்டப்பட்ட நிலையில் அவர் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். 2 போலீசார் அங்கிருந்தும் இந்த கொடூர சம்பவம் அரங்கேற்றியுள்ளது. இளைஞர் தாக்கப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. வாகனத்தில் இருந்து இறங்கிய அவர், கடைகளில் இருந்த பொருட்களை உடைக்கத் தொடங்கியதால் 100க்கும் மேற்பட்ட உள்ளூர் மக்கள் ஒன்று திரண்டதாகக் கூறப்படுகிறது.

அந்த இளைஞரை இரும்புக் கம்பியாலும், கூரான ஆயுதங்களாலும் தாக்கிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் இளைஞர் மீதான மனிதாபிமானமற்ற தாக்குதலை வேடிக்கை பார்த்த 2 காவலர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த இளைஞர், உத்திரபிரதேச மாநிலம் அசம்கர் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் மனநல பாதிப்புக்காக அவர் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

Mumbai mentally challenged human killed by some people.

அடுத்த செய்தி