ஆப்நகரம்

“பேக்கில் பாம் இருக்கு” என்று விளையாட்டிற்கு கலாய்த்த மும்பை மாடல் கைது!

“பேக்கில் பாம் இருக்கு” என்று விளையாட்டிற்கு கலாய்த்த மும்பை மாடல் கைது!

TNN 4 Mar 2017, 11:37 am
மும்பை : டெல்லி புறப்பட இருந்த சற்று நேரத்திற்கு முன்பு போர்டிங் கேட்டை கடந்த பின்னர், பேக்கில் பாம் இருக்கிறது என்று பாதுகாவலரிடம் விளையாட்டாக சொன்ன மும்பை மாடல் கன்சன் தாக்குரை காவல்துறையினர் கைது செய்தனர்.
Samayam Tamil mumbai model held for crying bomb just before boarding flight for delhi
“பேக்கில் பாம் இருக்கு” என்று விளையாட்டிற்கு கலாய்த்த மும்பை மாடல் கைது!


கடந்த வியாழன் அன்று மும்மை மாடல் கன்சன் தாக்குர் (27) மற்றும் அவரது நண்பர்கள் நான்கு பேர் தங்களுடைய தோழியின் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தால் டெல்லி புறப்படுவதற்கு மும்பை விமான நிலையத்திற்கு வந்தனர். போர்டிங் கேட்டை கடந்து சென்ற கன்சன் தன் தோழிகள் கடந்து வரும் போது, பாதுகாவலரை பார்த்து, அவர்களிடம் பாம் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்படவே, பாதுகாவலர்கள் உடனடியாக மத்திய தொழில் பாதுகாப்புத்துறை அதிகாரிகளை அழைத்தனர். முதற்கட்டமாக விமானத்தில் உள்ள அதிகாரிகளை தொடர்பு கொண்ட பாதுகாப்பு படையினர் கன்சன் உள்ளிட்ட நான்கு பேரின் பேக்குகளை கீழே இறக்கிவிட்டு விமானம் புறப்படலாம் என்றஉ கூறியுள்ளனர்.

அதுவரை பொறுமைகாத்த கன்சன், விளையாட்டிற்காக பாம் இருப்பதாக சொல்லியதாக விளக்கம் அளித்துள்ளார். ஆனால் பாதுகாப்புப்படை அதிகாரிகள் கன்சனின் விளக்கத்தை ஏற்க மறுத்தனர். அதனையடுத்து நால்வரின் பேக்கை கீழே இறக்கிவிட்டு, விமானம் ஒரு மணிநேரம் தாமதமாக 10 மணிக்கு டெல்லி புறப்பட்டது. எல்லா விமான நிலையத்திற்கும் எச்சரிக்கை விடுத்த பாதுகாப்பு அதிகாரிகள் கன்சனை சாகர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். தான் விளையாட்டிற்கு சொன்னதாக கன்சன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால் அவற்றை கண்டு கொள்ளாத காவல்துறை அதிகாரிகள் கன்சனின் தோழிகள் மற்ற மூவரும் மும்பையை விட்டு வெளியேறக்கூடாது என்று நிபந்தனை விதித்து கன்சன் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த காவல்துறை அதிகாரிகள் அவர்கள் விளையாட்டிற்காக செய்த காரியம் இவ்வளவு விபரீதமாக மாறியுள்ளது என்று கூறினர். விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் இது பற்றி கூறும் போது, இது போன்ற செயலில் இனி அவர்கள் ஈடுபடாமல் இருக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என்று கூறுகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு உண்டானதையும் சுட்டிக்காட்டினர். மேலும் இவ்வளவு பெரிய பிரச்னையாக மாறும் என்று எதிர்பார்க்காமல் அந்த பெண்கள் இது போன்ற செயலில் ஈடுபட்டுவிட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தேவையற்ற வதந்திகளை பரப்பிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட மாடல் கன்சன் தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அடுத்த செய்தி