ஆப்நகரம்

ஹோலி கொண்டாட்டம்: கொரோனாவை வித்தியாசமாக ‘அழித்த’ மும்பை மக்கள்!

வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Samayam Tamil 10 Mar 2020, 9:22 am
ஒருவருக்கொருவர் வண்ணப் பொடிகளை பூசி மகிழும் ஹோலி பண்டிகை வட மாநிலங்களில் கோலாகலமாக கொண்டாடப்படும்.
Samayam Tamil ஹோலி கொண்டாட்டம்


வசந்த காலத்தை வரவேற்கும் இந்தப் பண்டிகையில் முன்னணி அரசியல் தலைவர்கள் பலரும் வண்ணப் பொடிகள் பூசி கொண்டாடுவர். உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பிரதமர் மோடி உட்பட பல அரசியல் தலைவர்கள் இந்த ஆண்டு ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபடவில்லை.

கூட்டத்தினிடையே இருத்தல், ஒருவரை ஒருவர் தொடுதல் ஆகியவற்றால் கொரோனா பரவக் கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலைவர்கள் இந்த கொண்டாட்டங்களை புறக்கணித்தனர். ஆனால் பொதுமக்களோ எந்தவித தொய்வுமின்றி ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா: இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 47ஆக உயர்வு!

மும்பையில் இன்னும் ஒருபடி போய் ‘கொரோனா வைரஸை’யே எரித்து ஹோலி கொண்டாடியுள்ளனர். டெல்லி, மும்பை, கவுகாத்தி, பாட்னா உள்ளிட்ட நகரங்களில் நேற்று இரவு ஹோலிகா தகன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.

மும்பையில் கொரோனா வைரஸ் உருவ பொம்மையை பெரியதாக வடிவமைத்து அதை தீ வைத்து எரித்து ஹோலிகா தகன நிகழ்ச்சியை கொண்டாடினர். தற்போது நாட்டில் உடனடியாக அழிக்கப்பட வேண்டிய அரக்கன் கொரோனா வைரஸ்தான் என்ற பொருள்படும்படியாக இந்த நிகழ்ச்சி அமைந்தது.

அடுத்த செய்தி