ஆப்நகரம்

புத்தாண்டு கொண்டாட்டத்தில் மதுபோதை; வசமாக சிக்கிய 1,500 பேர் மீது வழக்குப்பதிவு!

மும்பை: மதுபோதையில் கார் ஓட்டிய ஆயிரக்கணக்கானோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Samayam Tamil 1 Jan 2019, 10:07 am
2019ஆம் ஆண்டின் ஆங்கிலப் புத்தாண்டு இன்று பிறந்துள்ளது. இதற்காக நேற்று இரவு முதலே கொண்டாட்டங்கள் தொடங்கின. முக்கிய இடங்களில் பொதுமக்கள் கூடி, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
Samayam Tamil Drunk and Drive


இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வாகனங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. நட்சத்திர ஓட்டல்களில் ஆடல், பாடல்களுடன் நிகழ்ச்சிகள் களைகட்டின. பார்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

இந்நிலையில் மும்பையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, மது போதையில் கார், பைக் ஓட்டிச் சென்ற 1,500 பேரை போலீசார் பிடித்தனர். அளவுக்கு அதிகமாக மது அருந்திய 70க்கும் மேற்பட்டோரை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். எங்கும் அசம்பாவிதம் ஏற்படாமல் தொடர் கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டனர்.

அடுத்த செய்தி