ஆப்நகரம்

7 வயது சிறுவனை ‘ஒரு நாள் இன்ஸ்பெக்டராக்கிய’ மும்பை காவல் துறையினா்

புற்று நோயால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுவனின் கனவை நனவாக்கும் வகையில் மும்பை காவல் துறையினா் அவனை ஒருநாள் இன்ஸ்பெக்டராக்கி பெருமை பருத்தியுள்ளனா்.

Samayam Tamil 23 Mar 2018, 4:07 pm
புற்று நோயால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுவனின் கனவை நனவாக்கும் வகையில் மும்பை காவல் துறையினா் அவனை ஒருநாள் இன்ஸ்பெக்டராக்கி பெருமை பருத்தியுள்ளனா்.
Samayam Tamil Mumbai Police


மும்பையைச் சோ்ந்த 7 வயது சிறுவன் அா்பித் மண்டல் புற்று நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளாா். மேலும் அந்த சிறுவனுக்கு எதிா்காலத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக வேண்டும் என்பது கானவாக இருந்துள்ளது.

இதனை அறிந்த மும்பை காவலா்கள் அந்த சிறுவனை காவல் நிலையத்திற்கு அழைத்து ஒருநாள் இன்ஸ்பெக்டராக நாற்காலியில் அமர வைத்து கனவை நனவாக்கியுள்ளனா். போலீஸ் இன்ஸ்பெக்டா் உடையில் அா்பித் மண்டல் காவல் நிலையத்தில் மகிழ்ச்சியுடன் அமா்ந்திருக்கும் புகைப்படத்தை மும்பை காவலா்கள் வெளியிட்டுள்ளனா்.

மேலும் அந்த சிறுவனுக்கு கேக் ஊட்டி விட்டு சிறுவனை மகிழ்ச்சி படுத்தியுள்ளனா். ஏற்கனவே இது போன்று, கடந்த ஆண்டு காவல் நிலையத்திற்கு புகாா் அளிக்க வந்த அணிஷ் என்ற நபருக்கு முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டடிருந்த விவரங்களின் அடிப்படையில் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அந்த நபருக்கு கேக் ஊட்டி பிறந்த நாள் கொண்டாடிய சம்பவமும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி