ஆப்நகரம்

மும்பையை மிரட்டும் கன மழை... மூழ்கின பஸ்கள்!!

வங்கக் கடலின் வடமேற்குப் பகுதியில் குறைந்தழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி மும்பையில் இன்று பலத்த மழை பெய்து அந்த நகரமே வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. பல இடங்களில் மக்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரயிலில் சிக்கிய 700 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஓல்டு பன்வெல் பகுதியில் பஸ் வெள்ளத்தில் மூழ்கி மிரட்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 27 Jul 2019, 4:25 pm
வங்கக் கடலின் வடமேற்குப் பகுதியில் குறைந்தழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி கொங்கன் பகுதியை ஒட்டிய பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு அதிக கன மழை இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே மும்பை பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. ஓல்டு பன்வெல் பகுதியில் பஸ் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
Samayam Tamil Mumbai 2


மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரயிலில் சிக்கிய பயணிகள் 700 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மத்திய ரயில்வே உணவு மற்றும் குடிநீர் அளித்து பத்லாபூரில் தங்க வைத்துள்ளது. பல இடங்களில் வானிலை மோசமாக இருப்பதால் கடற்படை மற்றும் விமானப்படையால் மீட்புப் பணிகளில் ஈடுபட முடியாத சூழல் உருவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நாசிக் மற்றும் இகாத்புரி தெஹ்சில் பகுதியில் 212 மி.மீ., மழை பெய்துள்ளது. நாசிக் நகரம் மற்றும் மகாராஷ்டிராவின் பல பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மக்கள் மும்பை-புனே எக்ஸ்பிரஸ் சாலையில் பயணிக்க வேண்டாம் என்று நெடுஞ்சாலைத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே, பல பயணிகள் இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் மோசமான வானிலையில் சிக்கியுள்ளனர்.

காங்கிரஸை கழற்றிவிட்டு பாஜகவுக்கு வால் பிடிக்கும் மஜத!
மின்சாரம் இல்லாமல் சிறுவனின் உடலில் வைத்தாலே எரியும் லைட் பல்ப்புகள்!
பலத்த மழையால் திருப்பதி - கோலாபூர் எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தானே பகுதியில் 160மி.மீ., கல்யாணில் 231 மி.மீ., முர்பாத் மற்றும் கர்ஜத் பகுதியில் தலா 332 மி.மீ., 300 மி.மீ., மழை பெய்துள்ளது. இன்னும் அதிக மழை பெய்யும் என்பதால், மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது.
பன்னீர்செல்வத்தின் மகன் யார் கையில்?

அடுத்த செய்தி