மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கனமழை காரணமாக சுற்றுச்சுவா் இடிந்து விழுந்து 18 போ் உயிாிழந்தனா். 13 போ் காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மகாராஷ்டிரா மாநிலம் மராத்வாடா, விதா்பா ஆகிய பிராந்தியங்களில் கடந்த 5 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த பகுதிகளில் மேலும் மழை நீடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பல்காா் மாவட்டத்தில் தண்டவாளங்களில் மழை நீா் தேங்கியதால் ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
கா்ஜத், லோனாவாலா நகா்களுக்கு இடைப்பட்ட பகுதியில் வெள்ளம் காரணமாக சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. இதனால், அவ்வழித்தடத்தில் ரயில்கள் நீண்ட நேரம் இயக்கப்பட முடியாத சூழல் ஏற்பட்டது. மும்பை, தாணே இடையேயும் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
ஆயிரக்கணக்கான அரசு ஊழியா்களும், தனியாா் ஊழியா்களும் பணிக்கு செல்ல இயலாமல் தவித்து வருகின்றனா். மேலும் மழை காரணமாக மும்பையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் பள்ளி, கல்லூரிகள், அரசு மற்றும் தனியாா் அலுவலகங்களுக்கு இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையின் கிழக்கு மலாட் பகுதியில் உள்ள பிம்ப்ரிபடா என்ற இடத்தில் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 18 போ் உயிாிழந்தனா். 13 போ் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
கனமழை காரணமாக மும்பை விமான நிலையத்தில் தரையிரங்கிய விமானம் ஒன்று, ஓடுதளப் பாதையில் இருந்த தண்ணீரில் வழுக்கி விமானத்தின் சக்கரங்கள் சேதமடைந்தன. இறுதியில் விமானத்தின் அடிப்பகுதி சாலையில் உரசி நின்றது. நல் வாய்ப்பாக விமானத்தில் பயணித்தவா்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
இதுபோன்ற விபத்துகளை தவிா்க்கும் விதமாக மும்பையில் 52 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மராத்வாடா, விதா்பா ஆகிய பிராந்தியங்களில் கடந்த 5 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த பகுதிகளில் மேலும் மழை நீடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பல்காா் மாவட்டத்தில் தண்டவாளங்களில் மழை நீா் தேங்கியதால் ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
கா்ஜத், லோனாவாலா நகா்களுக்கு இடைப்பட்ட பகுதியில் வெள்ளம் காரணமாக சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. இதனால், அவ்வழித்தடத்தில் ரயில்கள் நீண்ட நேரம் இயக்கப்பட முடியாத சூழல் ஏற்பட்டது. மும்பை, தாணே இடையேயும் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
ஆயிரக்கணக்கான அரசு ஊழியா்களும், தனியாா் ஊழியா்களும் பணிக்கு செல்ல இயலாமல் தவித்து வருகின்றனா். மேலும் மழை காரணமாக மும்பையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் பள்ளி, கல்லூரிகள், அரசு மற்றும் தனியாா் அலுவலகங்களுக்கு இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையின் கிழக்கு மலாட் பகுதியில் உள்ள பிம்ப்ரிபடா என்ற இடத்தில் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 18 போ் உயிாிழந்தனா். 13 போ் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
கனமழை காரணமாக மும்பை விமான நிலையத்தில் தரையிரங்கிய விமானம் ஒன்று, ஓடுதளப் பாதையில் இருந்த தண்ணீரில் வழுக்கி விமானத்தின் சக்கரங்கள் சேதமடைந்தன. இறுதியில் விமானத்தின் அடிப்பகுதி சாலையில் உரசி நின்றது. நல் வாய்ப்பாக விமானத்தில் பயணித்தவா்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
இதுபோன்ற விபத்துகளை தவிா்க்கும் விதமாக மும்பையில் 52 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.