ஆப்நகரம்

பாஜக முதல்வருக்கு முஸ்லீம் அமைப்புகள் வழங்கும் அமைதிக்கான விருது

மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் ஆளும் பாஜகவைச் சேர்ந்த முதல்வர் தேவேந்திர பட்விஸ் முஸ்லீம் அமைப்புகள் வழங்கும் அமைதிக்கான விருதுக்கு உரியவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

TOI Contributor 18 Jun 2017, 12:47 pm
மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் ஆளும் பாஜகவைச் சேர்ந்த முதல்வர் தேவேந்திர பட்விஸ் முஸ்லீம் அமைப்புகள் வழங்கும் அமைதிக்கான விருதுக்கு உரியவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
Samayam Tamil muslim groups give messiah of peace award to devendra fadnavis
பாஜக முதல்வருக்கு முஸ்லீம் அமைப்புகள் வழங்கும் அமைதிக்கான விருது


முஃப்தி முகம்மது மஸூர் ஸியாயீ என்ற அமைப்புடன் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் இணைந்து மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸுக்கு ‘அமைதியின் தூதுவர்’ என்ற விருதை வழங்குவதாக அறிவித்துள்ளன.

இது குறித்த அறிவிப்பில், “கடந்த மூன்று ஆண்டுகளாக தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான பாஜக அரசின் ஆட்சியில் மாநிலத்தில் சாதிக்கலவரங்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அமைதியின் தூதுவர் விருது அவருக்கு முற்றிலும் பொறுத்தமானதே.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பட்னவிஸ் முஸ்லீம் அமைப்புகளின் விருது பெறுவது குறித்து கருத்து தெரிவித்த மகாராஷ்டிர பாஜகவின் துணைத் தலைவர் ஹைதர் ஆசாம், “பாஜகவுடன் எந்த தொடர்பும் கொண்டிருக்காத முஸ்லீம் அமைப்புகள் முதல்வர் பட்னவிஸுக்கு இந்த விருதை அளிப்பது, சாதி சார்ந்த மோதல்களை ஒழிக்க பாஜக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் விதமாக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி