ஆப்நகரம்

மாடு திருடியதாக கூறி இஸ்லாமியர் படுகொலை!

மாடு திருடியதாக சந்தேகிக்கப்பட்ட இஸ்லாமிய இளைஞர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

Samayam Tamil 18 Dec 2020, 10:26 pm
பீஹார் மாநிலம் பாட்னாவில், மாடு திருடியதாக சந்தேகிக்கப்பட்ட 32 வயது இளைஞர் ஒருவரை கும்பலாக சேர்ந்து அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரத்தி குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil Representational image


ராமர் கோயில் கட்ட ஒரு ரூபாய் கொடுத்த மத்திய அரசு!

இந்த சம்பவத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பாட்னா அருகே உள்ள புல்வாரிஷரிஃப் என்ற இடத்தில் டிசம்பர் 16ஆம் தேதி அதிகாலையில் இந்த படுகொலை சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

அதிகாலை 3 மணியளவில் முகமது அலாம்கிர் என்ற இஸ்லாமிய இளைஞர் காலநடை கூடாரத்தில் எருமை மாட்டை அவிழ்த்ததாக கூறப்படுகிறது. அவருடன் துணையாக வந்த மற்றொருவர் தப்பித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, முகமதி அலாம்கிரை பிடித்து பல மணி நேரத்திற்கு கும்பலாக அடித்துள்ளனர். பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் மரணமடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.

சித்தி நடிகையிடம் இருந்து இதை தான் கத்துக்கிட்டேன்: வாரிசு நடிகை

மத்தியில் மோடி ஆட்சி வந்தபிறகு, பசு பாதுகாப்பு என்ற பெயரில் சில கும்பல்களால் பல்வேறு நபர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 2017ஆம் ஆண்டு இந்த கும்பல் கொலைகள் உச்சத்தை எட்டின. அப்போது, பசு மீது இருக்கும் பக்தியால் மனிதர்களை கொல்வதை ஏற்கமுடியாது என பிரதமர் மோடி தெரிவித்தார். ஆனாலும், அவ்வப்போது படுகொலைகள் நிகழ்வது தொடருகிறது.

அடுத்த செய்தி