கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், இறந்தாலும் அடக்கம் செய்ய எடுத்துச் செல்ல வாகனங்கள் இல்லை.
மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் இந்து மதத்தைச் சேர்ந்த 65 வயது பெண் நீண்ட நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் இறந்தார்.
அவரது மகன்கள் ஊரடங்கு காரணமாக வருவதற்கு தாமதம் ஆனது. உறவினர்களும் கொரோனா தொற்று அச்சம் காரணமாக வரவில்லை. இவரை அடக்கம் செய்வதற்காக எடுத்துச் செல்லவும் வாகனங்கள் இல்லை.
பாவம் தப்லிகி ஜமாஅத் பங்கேற்பாளர்கள்; எவ்வளவு சொன்னாலும் கேட்காத பாஜக தலைவர்கள்!
மகன்கள் வந்த பின்னர், அருகில் இருக்கும் முஸ்லிம் இளைஞர்கள் அவரது உடலை சுமார் 2.5 கி. மீட்டர் தொலைவில் இருக்கும் சுடுகாட்டுக்கு சுமந்து சென்று அடக்கம் செய்தனர். இந்த சம்பவம் பெரிய அளவில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.
கொரோனா, உள்ளேன் ஐயா! கோவிட், யெஸ் சார்!
பக்கத்து வீட்டைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் பிரேதத்தை எடுத்துச் செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, முகத்தில் மாஸ்க் அணிந்து சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
எப்படியெல்லாம் விழிப்புணர்வு ஏற்படுத்துறாங்க மக்களே; வந்திருச்சு கொரோனா கார்!
இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில் மத்தியப்பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத், ''முஸ்லிம் இளைஞர்கள் எந்த வேறுபாடும் பார்க்காமல் செய்த செயல் மிகவும் பாராட்டுக்குரியது. இது உண்மையான அன்பையும், சகோதரத்துவத்தையும் பரப்புகிறது'' என்று தெரிவித்துள்ளார்.
''எங்களது குழந்தை பருவத்தில் இருந்தே இந்த அம்மாவை எங்களுக்குத் தெரியும். அவரை முறையாக அடக்கம் செய்வதை எங்களது கடமையாக நாங்கள் உணர்ந்தோம்'' என்று தெரிவித்துள்ளனர்.
மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் இந்து மதத்தைச் சேர்ந்த 65 வயது பெண் நீண்ட நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் இறந்தார்.
அவரது மகன்கள் ஊரடங்கு காரணமாக வருவதற்கு தாமதம் ஆனது. உறவினர்களும் கொரோனா தொற்று அச்சம் காரணமாக வரவில்லை. இவரை அடக்கம் செய்வதற்காக எடுத்துச் செல்லவும் வாகனங்கள் இல்லை.
பாவம் தப்லிகி ஜமாஅத் பங்கேற்பாளர்கள்; எவ்வளவு சொன்னாலும் கேட்காத பாஜக தலைவர்கள்!
மகன்கள் வந்த பின்னர், அருகில் இருக்கும் முஸ்லிம் இளைஞர்கள் அவரது உடலை சுமார் 2.5 கி. மீட்டர் தொலைவில் இருக்கும் சுடுகாட்டுக்கு சுமந்து சென்று அடக்கம் செய்தனர். இந்த சம்பவம் பெரிய அளவில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.
கொரோனா, உள்ளேன் ஐயா! கோவிட், யெஸ் சார்!
பக்கத்து வீட்டைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் பிரேதத்தை எடுத்துச் செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, முகத்தில் மாஸ்க் அணிந்து சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
எப்படியெல்லாம் விழிப்புணர்வு ஏற்படுத்துறாங்க மக்களே; வந்திருச்சு கொரோனா கார்!
இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில் மத்தியப்பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத், ''முஸ்லிம் இளைஞர்கள் எந்த வேறுபாடும் பார்க்காமல் செய்த செயல் மிகவும் பாராட்டுக்குரியது. இது உண்மையான அன்பையும், சகோதரத்துவத்தையும் பரப்புகிறது'' என்று தெரிவித்துள்ளார்.
''எங்களது குழந்தை பருவத்தில் இருந்தே இந்த அம்மாவை எங்களுக்குத் தெரியும். அவரை முறையாக அடக்கம் செய்வதை எங்களது கடமையாக நாங்கள் உணர்ந்தோம்'' என்று தெரிவித்துள்ளனர்.