ஆப்நகரம்

ஆசிரமம் நடத்தி சிறுமிகளை பாலியல் சித்திரவதை செய்த முன்னாள் எம்எல்ஏவுக்கு என்ன தண்டனை தெரியுமா?

முஜாபார்பூரில் ஆசிரமம் நடத்தி இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் உள்பட 18 பேர் குற்றவாளிகள் என டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Samayam Tamil 20 Jan 2020, 6:33 pm
Samayam Tamil MUZA_571_855
பீகார் மாநிலம் முஜாபார்பூரில் உள்ள தனியார் கல்வி நிறுவனம் அம்மாநில அரசிடம் புகார் அறிக்கை ஒன்றைக் கடந்த 2018ஆம் ஆண்டு தாக்கல் செய்தது.

அந்த புகாரால் முஜாபார்பூரில் உள்ள சிறுமிகள் காப்பகம் ஒன்றில் பாலியல் வன்புணர்வு குற்றங்கள் அரங்கேறுவது ஆதாரத்துடன் வெளிச்சத்திற்கு வந்தது.


இதைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்பான விசாரணை நடந்தது. இறுதியாக டெல்லி நீதிமன்றம் ஒன்றில் இந்த வழக்குத் தொடர்பான விசாரணை நடந்தது.

நிர்பயா வழக்கு: தூக்குத் தண்டனையிலிருந்து குற்றவாளிகள் 'எஸ்கேப்'?

விசாரணையில், முன்னாள் எம்எல்ஏ பிரஜேஷ் தாக்கூர் உள்பட 19பேர் குற்றவாளிகள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மொத்தம் 20 பேர் மீது குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தது.

நாடே எதிர்பார்த்திருக்கும் நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிட புதிய தேதி அறிவிப்பு!!

வழக்கின் தீர்ப்பு இன்று வெளியான நிலையில், ஒருவரை மட்டும் நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. குற்றவாளிகள் அனைவருக்கும் போக்ஸோ சட்டத்தின் கீழும், கூட்டுப் பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழும் தண்டனை வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி