ஆப்நகரம்

உண்மைச் சம்பவங்களையே புத்தகமாக எழுதியுள்ளேன்: மார்கரெட் ஆல்வா

எனது வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களையே புத்தகமாக தொகுத்து, வெளியிட்டுள்ளதாக, காங்கிரஸ் மூத்த தலைவர் மார்கரெட் ஆல்வா தெரிவித்துள்ளார்.

TNN 16 Jul 2016, 6:15 pm
எனது வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களையே புத்தகமாக தொகுத்து, வெளியிட்டுள்ளதாக, காங்கிரஸ் மூத்த தலைவர் மார்கரெட் ஆல்வா தெரிவித்துள்ளார்.
Samayam Tamil my book is a story of my life margaret alva
உண்மைச் சம்பவங்களையே புத்தகமாக எழுதியுள்ளேன்: மார்கரெட் ஆல்வா


காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மார்கரெட் ஆல்வா, முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி மற்றும் ராஜிவ் காந்தி ஆகியோரின் அமைச்சரவையில் முக்கிய உறுப்பினராக இடம்பெற்றவர். சோனியா காந்தி காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்ற பின், தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி வாழும் மார்கரெட் ஆல்வா, தனது வாழ்க்கை தொடர்பாக, சுயசரிதை ஒன்றை எழுதி, கரேஜ் அண்ட் கமிட்மெண்ட் என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டுள்ளார்.

அதில், சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் ஆகியோருக்கு இடையே நிலவிய பனிப்போர் குறித்தும், மார்கரெட் ஆல்வா குறிப்பிட்டுள்ளார். இது, தேசிய அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இதுபற்றி விளக்கம் அளித்துள்ள மார்கரெட் ஆல்வா, உண்மைச்சம்பவங்களின் அடிப்படையில்தான் புத்தகம் எழுதியுள்ளதாகக் கூறியுள்ளார்.

பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடும் முன்பாக, சோனியா காந்தியை நேரில் சந்தித்து, ஒரு பிரதியை அவருக்கு வழங்கியதாகவும் கூறிய மார்கரெட் ஆல்வா, காங்கிரஸ் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள்தான் இந்த புத்தக விவகாரத்தை தேவையற்ற சர்ச்சையாக உருமாற்ற முயற்சிப்பதாகவும் சுட்டிக்காட்டி உள்ளார்.

அடுத்த செய்தி