ஆப்நகரம்

குழந்தை சுஜித் மரணம்: ராகுல் காந்தி இரங்கல்

சிறுவனை மீட்கும் பணிகள் கடந்த 5 நாட்களாக 80 மணி நேரத்தை தாண்டி நடைபெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை 4.30 மணியளவில் சிறுவனின் உடல் சடலமாக மீட்கப்பட்டது

Samayam Tamil 29 Oct 2019, 12:02 pm
டெல்லி: ஆழ்துளை கிணற்றில் சிக்கி உயிரிழந்த குழந்தை சுஜித்தின் குடும்பத்திற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil rahul gandhi


திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் கடந்த 25ஆம் தேதியன்று இரண்டு வயது சிறுவன் சுஜித் தவறி விழுந்து விட்டான். இதையடுத்து, சிறுவன் சுஜித்தை மீட்கும் பணிகள் நடைபெற்றன.

என் மனம் வலிக்கிறது: சுஜித்துக்கு அமைச்சர் விஜய பாஸ்கர் உருக்கமான கடிதம்!!

தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு படையினர், வருவாய் அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் இரவு, பகல் பாராமல் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். தமிழக அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என ஏராளமானோர் சம்பவ இடதுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். சிறுவன் சுஜித்திற்காக தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் ஏராளமானோர் சாதி, மத பேதமின்றி பிரார்த்தனை செய்து வந்தனர்.

கடுமையான பாறைகள், இயந்திரத்தில் பழுது, குறுக்கிடும் மழை என அவ்வப்போது மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டாலும் விடா முயற்சியுடன் சிறுவனை மீட்கும் பணிகள் கடந்த 5 நாட்களாக 80 மணி நேரத்தை தாண்டி நடைபெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை 4.30 மணியளவில் சிறுவனின் உடல் சடலமாக மீட்கப்பட்டது.

சுஜித் இறப்பிற்கு தமிழக முதல்வர், ஸ்டாலின், தமிழிசை உள்ளிட்டோர் இரங்கல்!

மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனையில் சிறுவனின் உடலுக்கு பிரேத பரிசோதனை முடிந்ததும் அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, ஆம்புலன்ஸ் மூலம் கரட்டுப்பட்டி அருகே உள்ள பாத்திமாபுதூர் கல்லறைத் தோட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. அடக்கம் செய்வதற்கு முன்பு வர முடியாதவர்கள் கல்லறைத் தோட்டத்துக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சுஜித் இறந்த ஆழ்துளைக் கிணறு கான்கிரீட் கலவை போட்டு மூடப்பட்டது!

சிறுவன் சுஜித்தின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களிலும் லட்சக்கணக்கானோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், ஆழ்துளை கிணற்றில் சிக்கி உயிரிழந்த குழந்தை சுஜித்தின் குடும்பத்திற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்,”குழந்தை சுஜித் உயிரிழந்த செய்தி கேட்டு வருந்துகிறேன். குழந்தை சுஜித்தின் இழப்பால் வாடும் பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி