ஆப்நகரம்

எனது முதல்வேலை தமிழகத்திற்கு நல்லது செய்வது - நிதின் கட்கரி அதிரடி பிளான் என்ன தெரியுமா!

தமிழகத்திற்கு நன்மை தரும் விஷயத்தை முதலில் செய்யவிருப்பதாக பாஜகவின் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 26 May 2019, 8:18 am
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 350 தொகுதிகளைக் கைப்பற்றி மிகப்பெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து மீண்டும் ஆட்சி அமைக்க மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.
Samayam Tamil Nitin Gadkari.


வரும் 30ஆம் தேதி, மோடி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்க உள்ளது. தமிழகத்தில் பாஜக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது. இருப்பினும் தமிழகத்திற்கு முக்கியத்துவம் தரும் வேலையை செய்யவிருப்பதாக நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இவர் கடந்த ஆட்சியின் போது மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலைத்துறை, கடல்வழி மற்றும் நீர்வளத்துறை அமைச்சராக இருந்தார். எனவே மீண்டும் அதே பொறுப்பு, நிதின் கட்கரிக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் முக்கியப் பதிவு ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. அதில், எனது முதல் பணி கோதாவரி மற்றும் கிருஷ்ணா ஆகிய நதிகளை இணைப்பதே.

இதன்மூலம் காவிரியில் தண்ணீர் பாய்ந்து, தமிழகத்திற்கு பெரும் உதவிகரமாக இருக்கும் என்று நிதின் கட்கரி கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுதான் பாஜக. தமிழ்நாடு முற்றிலும் பாஜகவை நிராகரித்தாலும், நாங்கள் எங்கள் பணியை தொடர்ந்து செய்வோம்.

நன்றி நிதின் கட்கரி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கோதாவரி நதியில் பாயும் தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது. எனவே 1,100 டி.எம்.சி அடி தண்ணீரை பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே காவிரி நதிநீர் பிரச்சனை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், கோதாவரி - கிருஷ்ணா நதிகளை இணைக்கும் வேலைகளை செய்யலாம்.

அடுத்த செய்தி