ஆப்நகரம்

400 ஆண்டுகளுக்குப் பின்னர் மைசூர் மகாராஜா குடும்பத்திற்கு த்ரிஷிகாவால் வாரிசு!!

தற்போதைய மைசூர் ராஜா யதுவீர் கிருஷ்ணதத்தா சாம்ராஜ் வாடியாரின் மனைவியும், ராணியுமான த்ரிஷிகா 4 மாத கர்ப்பமாக இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

TOI Contributor 18 Jun 2017, 12:38 pm
தற்போதைய மைசூர் ராஜா யதுவீர் கிருஷ்ணதத்தா சாம்ராஜ் வாடியாரின் மனைவியும், ராணியுமான த்ரிஷிகா 4 மாத கர்ப்பமாக இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
Samayam Tamil mysuru royal family to welcome new heiris curse of alamelamma on royal family broken
400 ஆண்டுகளுக்குப் பின்னர் மைசூர் மகாராஜா குடும்பத்திற்கு த்ரிஷிகாவால் வாரிசு!!


இவர் கர்ப்பம் தரித்து இருப்பதன் மூலம் மைசூர் மகாராஜா குடும்பத்தின் மீது இருந்த சாபம் 400 ஆண்டுகளுக்குப் பின்னர் நீங்கியுள்ளது என்று ராஜாவின் குடும்ப அனுதாபிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

மைசூரை கடந்த 1399 முதல் 1950ஆம் ஆண்டு வரை உடையார் எனப்படும் வாடியார் குடும்பத்தினர் ஆட்சி செய்து வருகின்றனர். குடியரசு நாடாக இந்தியாவை அறிவித்த நாளில் நாட்டில் மன்னராட்சியும் முடிவுக்கு வந்தது. சட்டப்படி ராஜா குடும்பம் மக்களை கட்டுப்படுத்த முடியாது. ஆனால், இன்றும் மைசூர் மக்கள் ராஜா குடும்பத்துக்கு மரியாதை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ராஜாவாக இருந்த ஸ்ரீகந்ததத்தா நரசிம்மராஜா வாடியார் கடந்த 2013ல் மரணமடைந்தார். (இவருக்கும், இவரது மனைவியும், மகாராணியுமான பிரமோத குமாரி தம்பதிகளுக்கு வாரிசு இல்லை.) இதையடுத்து, ஸ்ரீகந்ததத்தாவின் மரணத்திற்குப் பின்னர் கடந்த 2015ல் யதுவீரை பிரமோத குமாரி தத்து எடுத்துக் கொண்டார். யதுவீருக்கும், த்ரிஷிகாவுக்கும் கடந்த 2016ல் திருமணம் நடந்தது. தற்போது இவர் நான்கு மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.

சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு 1612ல் மைசூர் மகாராஜா குடும்பத்திற்கு வாரிசு இல்லாமல் போகும், தலக்காடு வறட்சியாகும் என்று திருமலராஜாவின் மனைவி அலமேலு அம்மா சாபம் இட்டதாகவும், இதன் பின்னர் அலமேலு அம்மா தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சாபத்திற்கு காரணம் திருமல ராஜாவிடம் இருந்து விஜயநகர பேரரசை ''ராஜா வாடியார் 1 அகா ராஜா வாடியார்'' அபகரித்துக் கொண்டார் என்பது குற்றச்சாட்டு. இந்த சாபத்தால்தான், மைசூர் ராஜா குடும்பத்தில் வந்த ராஜாக்கள் சிறிய வயதில் மரணமடைந்து வந்ததாகவும், குழந்தை வாரிசு இல்லாமல் போனதாகவும், இன்று தலக்காடு என்று அழைக்கப்படும், மாலங்கி கிராமம் வறட்சியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் 400 ஆண்டுகளுக்கு பின்னர் தத்து மகனால் ராஜா குடும்பத்திற்கு வாரிசு உருவாக உள்ளது.

Mysuru royal family to welcome new heir;Is curse of Alamelamma on royal family broken?

அடுத்த செய்தி