ஆப்நகரம்

கின்னஸ் சாதனை படைத்த மைசூரில் நடந்த சர்வதேச யோகா தினம்!

மைசூர் நகரத்தில், யோகா தினத்திற்காக 55,000 ஒரே நேரத்தில் செய்த யோகா, யோகா கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும், ஜீன் 21 ஆம் தேதி, சர்வதேச யோகா தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான யோகா தினத்தன்று மைசூர் 55,000 பேர் ஒரே நேரத்தில் யோகா செய்தனர்.

TNN 21 Nov 2017, 12:07 pm
மைசூர் நகரத்தில், யோகா தினத்திற்காக 55,000 ஒரே நேரத்தில் செய்த யோகா, யோகா கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
Samayam Tamil mysuru yoga meet finally gets guinness record
கின்னஸ் சாதனை படைத்த மைசூரில் நடந்த சர்வதேச யோகா தினம்!


ஒவ்வொரு ஆண்டும், ஜீன் 21 ஆம் தேதி, சர்வதேச யோகா தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான யோகா தினத்தன்று மைசூர் 55,000 பேர் ஒரே நேரத்தில் யோகா செய்தனர்.

இந்த நிகழ்வு தற்போது கின்னஸ் சாதனையில் இடம் பிடித்துள்ளது. இதேபோல் ஒரு நிகழ்வு அகமதாபாத்திலும் நடந்தது . அதிலும் அதிக மக்கள் கலந்துகொண்டு யோகா செய்தனர் . ஆனால் அதில் 54, 522 பேர் மட்டுமே கலந்துகொண்டனர்.

இதனால் மைசூரில் கொண்டாப்பட்ட யோகா தின நிகழ்ச்சிக்கு, கின்னஸில் இடம் கிடைத்துள்ளது. இந்த நிகழ்வில் அமைச்சர் சதானந்த கவுடா மற்றும் மஹா தேவப்பா ஆகியோர் கலந்துகொண்டனர்.

கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த செய்தி நேற்றைய தினத்தில் அறிவிக்கப்பட்டது இது தொடர்பாக யோகா ஆசியர் கணேஷ் கூறுகையில்’’ இந்த செய்தி மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்றும், மேலும் மைசூர் மக்களின் நம்பிக்கையும், முயற்சியுதான் இந்த வெற்றிக்கு காரணம் என்றும்தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி