ஆப்நகரம்

சீனா பிரச்னைக்கு முடிவுகட்ட வுஹானுக்குப் பறக்கும் மோடி

சீனா உடனான இந்தியாவின் உறவு பற்றி பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் நரேந்திர மோடி இன்று அந்நாட்டுக்குப் பயணிக்க உள்ளார்.

Samayam Tamil 26 Apr 2018, 10:42 am
டெல்லி: சீனா உடனான இந்தியாவின் உறவு பற்றி பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் நரேந்திர மோடி இன்று அந்நாட்டுக்குப் பயணிக்க உள்ளார்.
Samayam Tamil modi-xi-jinping-china-7591


சீனா, கஜகஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கியது ஷங்காய் கூட்டுறவு அமைப்பு. இந்த அமைப்பின் மாநாடு வரும் ஜூன் மாதம் ஷங்காய் நகரில் நடைபெறுகிறது.

இதற்கு முன் நடைபெறும் ஷங்காய் கூட்டுறவு அமைப்பின் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஏற்கெனவே ஷங்காய் நகருக்குச் சென்றுள்ளார். அவர் டோக்லாம் விவகாரம் உட்பட இந்தியா – சீனா இடையிலான பல பிரச்னைகள் பற்றி விரிவாக ஆலோசனை நடத்தினார்.

முன்னதாக, கடந்த 13ஆம் தேதி இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் சீனா சென்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில், இந்தியா – சீனா ஆகிய நாடுகளின் உயர்மட்ட தலைவர்கள் சீனாவில் உள்ள வுஹான் நகரில் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 27, 28 ஆகிய நாட்களில் நடைபெறும் இந்த உயர்மட்டத் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று சீனா புறப்படுகிறார்.

இக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் மோடி சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட அந்நாட்டு உயர் அதிகாரிகளுடன் இந்தியா - சீனா இடையிலான முக்கிய விவகாரங்கள் பற்றியும் இதர சர்வதேச பிரச்சனைகள் பற்றியும் ஆலோசிக்கிறார்.

அடுத்த செய்தி