ஆப்நகரம்

பழங்குடியினர் எஸ்.டி பிரிவில் நரிக்குறவர், குருவிக்காரர்கள் சேர்ப்பு

டெல்லி: நரிக்குறவர், குருவிக்காரர்கள், மலையாளி கவுண்டர்களை பழங்குடியினர் எஸ்.டி பிரிவில் சேர்க்க மத்திய அமைச்சரவை இன்று அனுமதி அளித்துள்ளது.

TOI Contributor 25 May 2016, 6:41 pm
டெல்லி: நரிக்குறவர், குருவிக்காரர்கள், மலையாளி கவுண்டர்களை பழங்குடியினர் எஸ்.டி பிரிவில் சேர்க்க மத்திய அமைச்சரவை இன்று அனுமதி அளித்துள்ளது.
Samayam Tamil narikuravaas and malayali gounders have included in the tribes list
பழங்குடியினர் எஸ்.டி பிரிவில் நரிக்குறவர், குருவிக்காரர்கள் சேர்ப்பு


பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் இந்த இனத்தவர்களுக்கான சட்ட திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

நரிக்குறவர், குருவிக்காரர்கள், மலையாளி கவுண்டர்களையும் பழங்குடியினர் எஸ்.டி., பிரிவில் சேர்ப்பதற்கான சட்ட திருத்த மசோதா ஏற்கனவே நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது.

இதேபோன்று, அசாம், சட்டீஸ்கர், புதுச்சேரி, ஜார்கண்ட் மாநிலங்களிலும் குறிப்பிட்ட இனத்தவரை பழங்குடி இனத்தவர் பட்டியலில் சேர்ப்பதற்கான சட்ட திருத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

அடுத்த செய்தி