ஆப்நகரம்

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிப்பு..!

மத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், திட்டமிட்டபடி வரும் 13 மற்றும் 14-ஆம் தேதிகளில் வேலை நிறுத்தம் நடைபெறும் என வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

TNN 9 Jul 2016, 12:34 am
மத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், திட்டமிட்டபடி வரும் 13 மற்றும் 14-ஆம் தேதிகளில் வேலை நிறுத்தம் நடைபெறும் என வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
Samayam Tamil national banks will conduct strike on 12 and 13th july
வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிப்பு..!



தேசிய வங்கிகளை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், 13 லட்சம் வாராக்கடன்களை வசூலிக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மாதம் 12 மற்றும் 13-ஆம் தேதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக வங்கி ஊழியர் சங்கம் அறிவித்திருந்தது.


இந்நிலையில் இந்த வேலை நிறுத்தத்தை தடுத்து நிறுத்துவதற்காக மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது.இதனை தொடர்ந்து நேற்று டெல்லியில் மத்திய தொழிலாளர் நல ஆணையருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால்,திட்டமிட்டப்படி வேலைநிறுத்தம் நடைபெறும் என வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.


12-ஆம் தேதி பாரத ஸ்டேட் வங்கி மற்றும் அதன் துணை நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்களும், 13-ஆம் தேதி அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் வேலைநிறுத்தம் நடைபெறும் நாட்களில் தேசிய வங்கிகள் மூலம் நடைபெறும் பண பரிவர்த்தனைகளில் பெரும் பாதிப்பு ஏற்படும் எனவும் கூறப்படுகிறது.இந்த வேலை நிறுத்தத்தில் சுமார் 3 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கு கொள்ள உள்ளனர்.

அடுத்த செய்தி