ஆப்நகரம்

இணையதளப் போரை தொடங்கிய பாகிஸ்தான் தேசிய பசுமை தீர்ப்பாய இணையதளம் முடக்கம்

​ தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தினை பாகிஸ்தான் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது.

ET CONTRIBUTORS 3 Oct 2016, 10:53 pm
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தினை பாகிஸ்தான் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil national green tribunal website hacked as revenge against surgical strike
இணையதளப் போரை தொடங்கிய பாகிஸ்தான் தேசிய பசுமை தீர்ப்பாய இணையதளம் முடக்கம்


பாகிஸ்தான் பகுதியில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை கடந்த 2-ம் தேதி இந்திய ராணுவம் ‘துல்லியமான தாக்குதல்’ நடத்தி அழித்தது. இந்நிலையில், அதற்கு பழிவாங்குவதாக கூறி, இன்று மர்ம நபர்கள் சிலர், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் இணையதளத்தில் ஊடுருவி, அதை முடக்கினர். மேலும், அதில் அவதூறு கருத்துகளையும் வெளியிட்டனர்.

‘நீங்கள் காஷ்மீரில் அப்பாவி மக்களை கொல்கிறீர்கள். எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுகிறீர்கள். அதை ‘துல்லியமான தாக்குதல்’ என்று சொல்லிக் கொள்கிறீர்கள். அதற்கு பதிலடியாக எங்கள் இணையதள போரின் பலனை அனுபவியுங்கள். எங்களை முறியடிக்க முடியாது’ என்று அதில் கூறியுள்ளனர். இந்த இணையதள ஊடுருவல் இரவு 7.15 மணி அளவில் கண்டுபிடிக்கப்பட்டது.

அடுத்த செய்தி