ஆப்நகரம்

தூக்கில் தொங்கிய தேசிய கபடி வீரரின் மனைவி !

இந்திய தேசிய கபடி வீரரின் மனைவி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

TOI Contributor 19 Oct 2016, 4:24 pm
புதுடில்லி: இந்திய தேசிய கபடி வீரரின் மனைவி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil national kabaddi player rohit chillars wife commits suicide at delhi home leaves video
தூக்கில் தொங்கிய தேசிய கபடி வீரரின் மனைவி !


இந்திய தேசிய ப்ரோ- கபடி லீக் வீரர் ரோகித் சில்லாரின் மனைவி லலிதா, அவரது வீட்டில் தூக்கு போட்டு தொங்கியுள்ளார். தவிர, தனது மரணம் குறித்த 2 மணி நேர ஆடியோ பதிவையும், கடிதம் ஒன்றையும் அவர் விட்டுச்சென்றுள்ளார்.

அதில் இந்த சமுதாயத்தில் சமாளித்து வாழும் அளவுக்கு மனதைரியம் இல்லை என்றும், அதனால் தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ள முடிவு செய்துவிட்டதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார். பெங்களூரு புல்ஸ், அணிக்காக விளையாடும் போது லலிதாவை, ரோகித் திருமணம் செய்து கொண்டார்.

ஆனால், லலிதாவிற்கு இது இரண்டாவது திருமணமாகும். லலிதாவின் முதல் திருமணத்தில் அவர் வரதட்சனைக்காக மிகவும் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளார். அதனால் ஏற்கனவே மிகவும் மனமுடைந்துள்ளார்.இந்நிலையில் ரோகித்துடனான விவாதத்தின் போது, அவரை தனித்துவிடும்படி ரோகித் கூறியதால், அவருக்கு முந்தைய வாழ்க்கையின் தாக்கம் அதிகம் இருந்ததால் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக, லலிதாவின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அவரது கடிதம் மற்றும் இரண்டு மணிநேர ஆடியோ ஆதாரங்களைக்கொண்டு, ரோகித் மற்றும் அவரது குடும்பத்தாரையும் போலீசார் விசாரிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி