ஆப்நகரம்

National Science Day: அறிவியல் என்பது சாதாரண மக்களுக்கும் சென்றடைய வேண்டும் : இன்று தேசிய அறிவியல் தினம்!

இந்தியாவில் தேசிய அறிவியல் நாள் ஆண்டு தோறும் பிப்ரவரி 28ம் தேதி கொண்டாடப்படுகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், அறிவியல் முக்கிய பங்கு வகிக்கிறது. மாணவர்கள் மத்தியில் அறிவியல் ஆர்வத்தை அதிகரிக்கும் விதமாக, ஆண்டுதோறும் பிப்ரவரி 28ம் தேதி தேசிய அறிவியல் தினம், கடைபிடிக்கப்படுகிறது.

Samayam Tamil 28 Feb 2019, 10:46 am
இந்தியாவில் தேசிய அறிவியல் நாள் ஆண்டு தோறும் பிப்ரவரி 28ம் தேதி கொண்டாடப்படுகிறது.
Samayam Tamil CV Raman


நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், அறிவியல் முக்கிய பங்கு வகிக்கிறது. மாணவர்கள் மத்தியில் அறிவியல் ஆர்வத்தை அதிகரிக்கும் விதமாக, ஆண்டுதோறும் பிப்ரவரி 28ம் தேதி தேசிய அறிவியல் தினம், கடைபிடிக்கப்படுகிறது.

அறிவியல் பயன்பாடு விஞ்ஞானிகள், படித்தவர்கள் மட்டுமில்லாமல், சாதாரண மக்களுக்கும் சென்றடைய வேண்டும். தேசத்தலைவர்கள், தியாகிகளைக் கொண்டாடுவது போல, அறிவியல் மேதைகளை போற்ற கடந்த 1987 முதல் இந்தத் தேசிய அறிவியல் தினம், இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் குறிக்கோளை அடிப்படையாக கொண்டு இந்நாள் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் சர் சி.வி.ராமன், ராமன் விளைவு கண்டுபிடித்த நாள், தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது. இவர் 1888 நவம்பர் 7ம்தேதி திருச்சி அருகேயுள்ள திருவானைக்காலில் பிறந்தார். பிரசிடென்சி கல்லூரியில் இளநிலை, முதுநிலை இயற்பியல் பட்டப்படிப்பை முடித்தார். கொல்கத்தா பல்கலையில் பேராசிரியராக சேர்ந்தார்.
நீர், காற்று உள்ளிட்ட தடையற்ற ஊடகத்தில் ஒளி ஊடுறுவும் போது, சிதறல் அடைந்து அதன் அலை நீளமாக மாறுகிறது. அதில் அதிகமாக சிதறும் நீல நிறம், தண்ணீரில் தோன்றுகிறது என கண்டறிந்தார். இதற்காக கடந்த 1930ம் ஆண்டு, இயற்பியலுக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.

இந்திய மண்ணில் பிறந்து, உலகம் புகழும் பல அரிய கண்டுபிடிப்புகளை ஆராய்ந்து வெளியிட்ட, சிறந்த இயற்பியல் மேதை சர். சி. வி ராமன், தன் நோபல் பரிசு பெற்ற ஆராய்ச்சி (ராமன் விளைவு கோட்பாடு) முடிவை வெளியிட்ட தினமான பிப்ரவரி 28 ம் தேதியே இந்த தேசிய அறிவியல் தினமாக அறிவிக்கப்பட்டது.
அறிவியலைப் பரப்புவதற்காக சிறப்பாக செயல்படும் நிறுவனங்கள், தனிநபர்களுக்கு தேசிய விருதும் இந்த நாளில் வழங்கப்பட்டு வருகிறது.

அடுத்த செய்தி