ஆப்நகரம்

நாடு முழுவதும் பொதுமுடக்கம் நீட்டிப்பு: மத்திய அரசு அதிரடி உத்தரவு!

நாடு முழுவதும் தளர்வுகளுடன் பொது முடக்கத்தை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது

Samayam Tamil 28 Dec 2020, 7:40 pm
உலகை அச்சுறுத்தி வந்த கொரோனா இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் தலை தூக்க தொடங்கியது. இதையடுத்து, கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் முடக்கப்பட்டது. அத்தியாவசிய தேவைகளுக்கான சேவையை தவிர அனைத்துவிதமான நடவடிக்கைகளும் முடக்கப்பட்டது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வந்த பொது முடக்கத்தை வருகிற 31ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்தது. அதேசமயம், UNLOCK நடைமுறையின் கீழ் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கத்தை வருகிற ஜனவரி மாதம் 31ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று உள்ள இடங்களில் கட்டுப்பாடுகள் தொடரும் என்றும், கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 30ஆம் தேதி பேச்சுவார்த்தை: விவசாயிகளை மீண்டும் அழைத்த மத்திய அரசு!

மேலும், கடந்த நவம்பர் மாதம் 25ஆம் தேதியன்று மத்திய உள்துறை மற்றும் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் தொடரும் என்றும், அந்த நடவடிக்கைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பு எண்ணிக்கைகளில் தொடர்ச்சியாக சரிவு காணப்பட்டாலும் கண்காணிப்பு, கட்டுப்பாடு மற்றும் எச்சரிக்கையை பராமரிக்க வேண்டியது அவசியம் என்றும், பிரிட்டனில் பரவி வரும் புதிய கொரோனாவை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி